News December 1, 2024
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு புகைப்படங்கள்!

சுற்றுலா நகரமான புதுச்சேரியை ஃபெஞ்சல் புயல் சீர்குலைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரே நாளில் கொட்டித்தீர்த்த 47 செ.மீ கனமழையால் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. 20 மணிநேரமாகப் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை என்பதால், பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனர். மீட்புப் பணியில் அரசு ஊழியர்களுடன் SDRF, ARMY உள்ளிட்டோரும் களமிறங்கியுள்ளனர். விரைவில் மீண்டு வா புதுவையே..!
Similar News
News August 21, 2025
மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன Kutty Story..

ஒரு ராஜா தளபதியை தேர்ந்தெடுக்க 10 பேரிடம் விதைகளை கொடுத்தார். அதில் ராஜாவை ஏமாற்ற நினைத்த 9 பேர் வேறு விதையை மரமாக வளர்த்து கொண்டுவந்தனர். ஆனால் அந்த ராஜா விதையோடு வந்த ஒருவனை தான் தளபதியாக தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் அவர் கொடுத்த விதைகள் வேகவைக்கப்பட்டவை, அது வளராது என கூறி கதையை முடித்துக்கொண்ட விஜய், உண்மையான ஒருவரையே தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
News August 21, 2025
SPACE: ஜூபிடரில் உள்ள RED DOT மர்மம்..என்ன தெரியுமா?

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளின் மேற்பரப்பில் ஒரு தனித்துவமான சிவப்பு புள்ளியை நாம் கண்டிருப்போம். இதை என்னவென்று நீங்கள் யோசித்தது உண்டா? வியாழனில் அமைந்துள்ள இந்த சிவப்பு புள்ளி ஒரு சாதாரண புள்ளி அல்ல. இது 350 நூற்றாண்டுகளுக்கு மேலாக சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சுழல் என்கின்றனர் விஞ்ஞானிகள். இச்சுழல் சுமார் 16,000 கிமீ நீளமும் 12,000 கிமீ அகலமும் கொண்டது. SHARE.
News August 21, 2025
கவர்னருக்கு காலக்கெடு கூடாது… மத்திய அரசு வாதம்

ஜனாதிபதி, கவர்னருக்கு <<17154106>>காலக்கெடு<<>> விதிப்பது தொடர்பான வழக்கு இன்று SC-யில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பாதிக்கப்பட்ட மாநிலம் கோர்ட்டை அணுகினால், கோர்ட் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?’ என CJI கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல், ‘அனைத்து பிரச்னைக்கும் நீதிமன்றமே தீர்வு அல்ல. அரசியல் சாசன அதிகாரிக்கு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை’ என்று பதிலளித்தார்.