News December 6, 2024
ரயில் மோதியதில் பெண் SSI உடல் நசுங்கி பலி

வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலை பெண் போலீஸ் ஒருவர் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி காந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் SSIஆக இருந்த ஸ்டெல்லா மேரி (50) என்பது தெரியவந்துள்ளது. ஏலகிரி எக்ஸ்பிரஸை பிடிக்க அவசரமாகச் சென்றபோது அவர் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. போலீசா இருந்தாலும் பொறுமை அவசியம்..
Similar News
News November 23, 2025
இந்த Browser-ல் விளம்பரங்களே வராது!

கூகுள் குரோமுக்கு போட்டியாக Perplexity நிறுவனம் Comet பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது, இதில் நீங்கள் பல Tab-களை Open செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தேடும் அனைத்தும் ஒரே Tab-ல் சம்மரியாக கொடுக்கும் ‘Cross-Tab Summaries’ வசதி இதில் உள்ளது. இதில் ‘Ad Blocker’ இருப்பதால் விளம்பரம் வராது. இந்த பிரவுசர் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும். SHARE.
News November 23, 2025
21 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதை

பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது தமிழ் தொண்டினை கௌரவிக்கும் விதமாக போலீஸ் மரியாதை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


