News December 6, 2024
ரயில் மோதியதில் பெண் SSI உடல் நசுங்கி பலி

வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலை பெண் போலீஸ் ஒருவர் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி காந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் SSIஆக இருந்த ஸ்டெல்லா மேரி (50) என்பது தெரியவந்துள்ளது. ஏலகிரி எக்ஸ்பிரஸை பிடிக்க அவசரமாகச் சென்றபோது அவர் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. போலீசா இருந்தாலும் பொறுமை அவசியம்..
Similar News
News August 26, 2025
SKவின் ‘அமரன்’ படத்துக்கு கேரளாவில் விருது

கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில், ‘அமரன்’ ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ விருதை வென்றுள்ளது. ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு, கேரள அமைச்சர் வாசவன் விருது வழங்கி கெளரவித்தார். சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை தழுவி எடுக்கப்பட்டது.
News August 26, 2025
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன். *நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள்; நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி. *ECG வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.
News August 26, 2025
கேப்டன்சி வாய்ப்பை நழுவ விட்ட ஸ்ரேயாஸ் ஐயர்

ஆசிய கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணியின் பேப்டன்சி வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் நிராகரித்தாக கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் வாய்ப்பை ஏற்காததால் அந்த வாய்ப்பு ஷர்துல் தாக்கூருக்கு சென்றது. ஆசிய கோப்பை கனவு தகர்ந்ததால் இப்போது சாதரண வீரராக துலீப் டிராபியில் அவர் விளையாட உள்ளார். போராட்ட குணம் கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் டி20 அணியில் நிச்சயம் இணைவார் என நம்பலாம்.