News March 25, 2025
மரண பயமா? ஹுசைனி பரிந்துரைத்த 3 புத்தகங்கள்!

எப்படிப்பட்ட வீரனும் மரணத்தைக் கண்டு பயப்படுவது உண்டு. ஆனால், கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனி, சாவை கண்டும் சிறிதும் அஞ்சாமல் இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், மரணத்தை துச்சமாக அவர் மதிக்க 3 புத்தகங்களே காரணம் என ஹுசைனி தனது கடைசி வீடியோவில் கூறுகிறார். DIE, அருண் செளரி எழுதிய PREPARING FOR DEATH, வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கி எழுதிய WHY WE DIE ஆகிய புத்தகங்கள்தான் அவை.
Similar News
News March 26, 2025
திருஷ்டி தோஷம் போக்கும் திருநீறு

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், குடும்ப நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருநீறுக்கு உண்டாம். ‘நமசிவாய’ என்று சொல்லி திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
News March 26, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶ மதிப்பற்ற மக்கள் உணவுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்; மதிப்புடைய மக்கள் வாழ்வதற்காக மட்டுமே உண்கிறார்கள் ▶ உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்திருப்பதிலேயே உண்மையான ஞானம் இருக்கிறது ▶ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியையும் அதன் விலையையும் கொண்டுள்ளது ▶ அனைத்து மனித ஆசிர்வாதங்களில் மரணம் மிக பெரியதாக இருக்கலாம்.
News March 26, 2025
மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.