News March 23, 2025
தந்தை பெரியார் பொன்மொழிகள்

*ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். *முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். *முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது. அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும். *ஓய்வும், சலிப்பும் தற்கொலைக்கு சமமானது. *கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
Similar News
News March 24, 2025
அனைத்துக்கட்சிகளுடன் EC இன்று ஆலோசனை

TNல் தேர்தல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், ஒரே நபர் 2 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பது, இறந்தவர்களின் பெயர் நீக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்கின்றன.
News March 24, 2025
வெயில்.. மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாள்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்பதால், நண்பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், குடை மற்றும் தொப்பிகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News March 24, 2025
வனப்பகுதியில் உருவாகி வரும் இன்னொரு ‘வீரப்பன்’

தமிழ்நாடு – கர்நாடகா வனத்துறைக்கு போக்கு காட்டிவரும் செந்தில் என்பவரை இன்னொரு ‘வீரப்பன்’ என கூறுகின்றனர். வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராமத்தில் வசித்து வந்த செந்தில், யானைகளை வேட்டையாடி தந்தங்களைக் கடத்தியுள்ளான். அதிகாரிகள் பலருக்கும் மான் கறியை விருந்து படைத்ததும் தெரியவந்துள்ளது. அண்மையில் கர்நாடக வனத்துறையினரிடம் சிக்கிய செந்தில், தப்பியோடிய நிலையில் அவனை வலைவீசி தேடி வருகின்றனர்.