News February 11, 2025
7 வயது மகனை கொன்ற தந்தை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737607430327_1241-normal-WIFI.webp)
பிஹாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், தன் 7 வயது மகனை, தலையை துண்டித்து தந்தையே கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. 2-ம் வகுப்பு படிக்கும் மகன் ஸ்கூல் ஃபீஸ் கேட்டு தொல்லை செய்யவே, இப்படி செய்ததாகவும், இனி அவனுக்காக படிப்பு செலவு தேவையில்லை, வீடு வாங்க வேண்டியதில்லை, மொத்தத்தில் செலவில்லை என்று சொல்லி அந்த கொடூரன் வீடியோவும் வெளியிட்டுள்ளான். இதனால் விஷயம் வெளியே தெரிய, அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
Similar News
News February 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739293772125_785-normal-WIFI.webp)
இன்று (பிப்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
News February 12, 2025
வெறுப்பு பேச்சு தொடர்ந்து அதிகரிப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739291750073_347-normal-WIFI.webp)
தேர்தல் நேரத்தில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, ‘இந்தியா ஹேட் லாப்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2023இல் 233 சம்பவங்கள் பதிவான நிலையில், 2024இல் அது 1,165ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பிரதமர் மோடி 63 முறை வெறுப்புணர்வு கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும், பாஜக தலைவர்கள் 450 முறை வெறுப்பு பேச்சுக்கள் பேசியதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2025
தினமும் 700 கி.மீ. பயணித்து வேலைக்கு செல்லும் பெண்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739288101748_1204-normal-WIFI.webp)
வேலைக்காக தினமும் பல கி.மீ. தூரம் வரை பயணிப்பவர்கள் உண்டு. ஆனால், ஊர் விட்டு ஊர் செல்வது போல 700 கி.மீ. பயணித்து வேலைக்கு செல்பவரை பார்த்தது உண்டா? மலேசியாவின் பெனாங் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரேச்சல் கெளர் என்பவர், தினமும் கொலாலம்பூர் வரை விமானத்தில் 700 கி.மீ. பயணித்து வேலைக்கு சென்று வருகிறார். குடும்பத்தினரை மிஸ் செய்யக்கூடாது என்பதால் இப்படி பயணிக்கிறாராம்.