News October 19, 2025
அப்பாவு பேரவை மரபுகளை மீறுகிறார்: அன்புமணி

புதிய சட்டமன்ற குழு நிர்வாகிகளை ஏற்க சபாநாயகர் அப்பாவு மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். 24 உறுப்பினர்களை (மொத்த உறுப்பினர்களில் 10%) கொண்ட கட்சிகளை மட்டுமே பேரவையில் அங்கீகரிக்க முடியும் என்று, அரசியலுக்கு ஏற்ப விதிகளை மாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியாக அங்கீகாரம் செய்வதற்கு மட்டுமே 10% உறுப்பினர்கள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News October 19, 2025
பெற்றோரை கவனிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் கட்!

அன்பையும், பாசத்தையும் ஊட்டி தோளில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி காலத்தில் கைவிட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. வயதான பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15% பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோருக்கு வழங்கப்படும் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
News October 19, 2025
ஆப்கனிடம் இருந்து BCCI கற்று கொள்ள வேண்டும்: சிவசேனா

பாகிஸ்தானுடன் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறுவதாக <<18038009>>ஆப்கன்<<>> அறிவித்தது. இதை சுட்டிக்காட்டி, ஆப்கனிடம் இருந்து BCCI-யும், மத்திய அரசும் கற்று கொள்ள வேண்டும் என வேண்டும் என சிவசேனா (UBT) தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டை விட நாட்டு நலனுக்கு ஆப்கன் முக்கியத்துவம் கொடுத்ததையும் பாராட்டியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆசிய கோப்பையில் PAK உடன் இந்தியா விளையாடியது.
News October 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 493 ▶குறள்: ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். ▶பொருள்: பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.