News September 13, 2024

நீதிமன்றத்தில் அப்பாவு ஆஜர்

image

அவதூறு வழக்கு விசாரணைக்காக சபாநாயகர் அப்பாவு, சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதன் வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி, அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Similar News

News December 6, 2025

சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

image

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

News December 6, 2025

ஜார்கண்டிடம் சரணடைந்த தமிழ்நாடு அணி

image

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அணியிடம் தமிழ்நாடு வீழ்ந்தது. முதலில் விளையாடிய ஜார்கண்ட் அணியில் குமார் குஷாக்ரா(84), விராட் சிங்(72) ஆகியோர் TN பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் தமிழ்நாட்டுக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சாய் சுதர்சனை தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால், 20 ஓவர்களில் 179 ரன்களை மட்டுமே எடுத்த TN, தோல்வியடைந்தது.

News December 6, 2025

AGF-PAK இடையே மீண்டும் வெடித்த மோதல்: 4 பேர் பலி

image

சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், AGF-PAK இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. எல்லையில் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யார் முதலில் மோதலை தொடங்கியது என்பதில், இருதரப்பும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பொதுமக்களே சிக்கி தவித்து வருகின்றனர்.

error: Content is protected !!