News September 13, 2024
நீதிமன்றத்தில் அப்பாவு ஆஜர்

அவதூறு வழக்கு விசாரணைக்காக சபாநாயகர் அப்பாவு, சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதன் வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி, அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Similar News
News November 15, 2025
எந்த விலங்கிடம் என்ன கத்துக்கலாம்? PHOTOS

விலங்குகளிடமிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அமைதி, பொறுமை, ஒற்றுமை, ஒழுக்கம் போன்ற மதிப்புகள் அவற்றின் நடத்தை மூலம் தெளிவாக வெளிப்படுகின்றன. செயலில் காட்டும் ஆசிரியர்கள் போல, விலங்குகளிடமிருந்து, நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். எந்த விலங்கிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 15, 2025
மாம்பழம் சின்னம்: ராமதாஸ் முக்கிய ஆலோசனை

மாம்பழம் சின்னம் தங்களுக்கானது என்று அன்புமணி தரப்பு ECI-க்கு கடிதம் எழுதியுள்ளது. எனவே, சட்டப் போராட்டத்தை கையிலெடுக்கும் வகையில், பாமக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை உறுப்பினர்களுடன், ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி அங்கீகாரத்தை பெறுவது, மாம்பழம் சின்னம் ஆகியவற்றிற்காக SC-ஐ நாட இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 15, 2025
பின்தங்கி இருக்கும் இந்திய மாநிலங்கள்

UDISE+ 2024-25 அறிக்கையின்படி, இந்தியாவில் மாநிலம் வாரியாக கணினி வசதி கொண்ட அரசுப் பள்ளிகளின் சதவீதம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 99.6% பள்ளிகளில் கணினி வசதி உள்ளது. ஆனால், 50%-க்கும் குறைவாக 10 மாநிலங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


