News August 12, 2025

மகாராஷ்டிராவில் கோர விபத்து: 8 பேர் உயிரிழப்பு

image

மகாராஷ்டிரா மாநிலம் ஹெத் மலைப்பகுதியில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை தரிசனம் செய்வதற்காக 40 பக்தர்களுடன் வந்த மினி சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பெண்கள் உயிரிழந்த நிலையில், 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹4 லட்சம் நிவாரணம் அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 12, 2025

டெல்லியில் இருந்து நற்செய்தி வருகிறது: அண்ணாமலை

image

தமிழகத்திற்கு குறிப்பாக கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் ‘அத்திக்கடவு நாயகன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். அண்மையில் TN விவசாயிகள் டெல்லியில் PM மோடியை சந்தித்து பேசியிருந்தனர். அத்திக்கடவு – அவிநாசி 2-ம் கட்ட திட்டம் (அ) விவசாயிகளுக்கு புதிய திட்டம் குறித்தோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

News August 12, 2025

இறை வழிபாட்டின் முழு பலனை பெற..

image

வீட்டில் தினமும் இஷ்ட தெய்வத்தை வணங்க முடியவில்லை என்றால், அதற்கு கர்ம வினைகளே காரணமாக இருக்கும். இந்த கர்ம வினையை மாற்றி, வீட்டில் பூஜை செய்ய, இந்த 3 விஷயங்களை செய்யுங்கள். வீட்டில் பூஜை செய்யும் போது, இறைவனின் படத்திற்கு கைகளால் பூக்களைத் தூவி, மனதை ஒருநிலைப்படுத்தி, வாய் முழுக்க சத்தமாக கடவுள் மந்திரங்களை சொல்லி பூஜியுங்கள். இது பூஜையின் முழு பலன்களை அடைய செய்யும் என்பது ஐதீகம்.

News August 12, 2025

ராகுல் காந்தி கைதுக்கு கமல் கண்டனம்

image

வெளிப்படைத்தன்மை கேட்டு போராடிய MP-க்களை கைது செய்தது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சமம் என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கைதை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும் போது, அது வெறும் அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம், நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் தார்மீக நெருக்கடி என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!