News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News November 4, 2025
கோவை கல்லூரி மாணவி வழக்கில் அடுத்த அதிர்ச்சி

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் சுட்டுப்பிடித்த 3 பேர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் மூவரும் ஏற்கெனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது கோவை கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
News November 4, 2025
வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்!

✱தேவை: மூங்கில் உப்பு, கூகை நீறு, இலவங்கப்பட்டை பொடி, சீந்தில் சர்க்கரை, மாதுளம் பூ, கற்கண்டு, ஏந்தல் அரிசி பொடி, திப்பிலி ✱செய்முறை: தண்ணீரில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் போட்டு, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து, வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடிக்கவும். சர்க்கரை நோயாளிகள் கற்கண்டு சேர்க்க வேண்டாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News November 4, 2025
DMK அதிகாரத்துக்கு பயப்படும் அரசியல் கட்சிகள்: G.K.வாசன்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று G.K.வாசன் தெரிவித்துள்ளார். திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றுள்ளனர் என சாடினார். மேலும், முறையாக தேர்தல் நடத்த கோட்பாடுகளை வழங்கும் தேர்தல் ஆணையத்தை தோல்வி பயத்தால் ஆளும் திமுக எதிர்க்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.


