News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News January 29, 2026
பாஜக வந்த பிறகு தற்கொலைகள் அதிகரிப்பு: CM

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிய பாகுபாட்டை ஒழிப்பதற்காக UGC விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை குறிப்பிட்ட அவர், தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்கது என்றார். மேலும், உயர்கல்வி நிறுவனங்களை RSS ஆதரவாளர்கள் வழிநடத்தினால் சமத்துவக் குழுக்கள் சுதந்திரமாக செயல்படுமா எனவும் கேட்டுள்ளார்.
News January 29, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.29) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹1,190 உயர்ந்து ₹16,800-க்கும், சவரனுக்கு ₹9,520 அதிகரித்து ₹1,34,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் வரும் நாள்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News January 29, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.29) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹1,190 உயர்ந்து ₹16,800-க்கும், சவரனுக்கு ₹9,520 அதிகரித்து ₹1,34,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் வரும் நாள்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


