News January 3, 2025

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

image

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.

Similar News

News February 1, 2026

திமுக தான் ஒரே சாய்ஸ்? குழப்பத்தில் OPS தரப்பு

image

ADMK கதவை EPS ஒரேயடியாக அடைத்துவிட்டதால், திமுகவில் இணையலாம் என OPS-யிடம் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி சென்றால், OPS-க்கு அமைச்சர் பதவி கிடைப்பதோடு ஆதரவாளர்கள் சிலரும் MLA ஆகலாம் என யோசனை சொன்னார்களாம். அதேநேரம், TVK உடன் கூட்டணி அமைத்தால், அதிமுக தோற்பதற்கு காரணமாக இருப்போமே தவிர நமக்கு எந்த பலனும் இல்லையென்றும் நிர்வாகிகள் கூறினார்களாம். என்ன முடிவெடுப்பார் OPS?

News February 1, 2026

H.ராஜாவை நலம் விசாரித்த CM ஸ்டாலின்

image

பாஜக மூத்த தலைவர் <<19008405>>H.ராஜா<<>>, பக்கவாதத்தால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், H.ராஜாவின் உடல்நிலை குறித்து அறிய, உதயநிதியுடன் CM ஸ்டாலின் ஹாஸ்பிடலுக்கு சென்றார். மேலும், H.ராஜா குடும்பத்தினரை சந்தித்து சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

News February 1, 2026

பெண்கள், தொழில்துறைக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: PM

image

140 கோடி மக்களுக்கான வளர்ச்சியடைந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். 2027-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கான அடித்தளமாக மத்திய பட்ஜெட் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்துறைக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!