News January 3, 2025

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

image

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.

Similar News

News December 31, 2025

பொங்கல் பரிசு பணம்.. அரசு முக்கிய அறிவிப்பு

image

ஜன.2-க்குள் பொங்கல் பரிசு டோக்கன்களை அச்சிட்டு தயார் நிலையில் வைக்க கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, பொங்கல் பரிசாக ₹5,000 தரவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், ₹3,000 வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி, புத்தாண்டு வாழ்த்து செய்தியுடன் CM ஸ்டாலின் அறிவிக்கவுள்ளாராம். அதன்பிறகு, பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கும் தேதி தனியே தெரிவிக்கப்படும்.

News December 31, 2025

பொருளாதாரத்தில் இந்தியா சாதனை

image

ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் பொருளாதார மதிப்பு 4.18 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2030-க்குள் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை இந்தியா பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் GDP 8.2% ஆக வளர்ச்சி அடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News December 31, 2025

அட்டகாசமான மார்கழி கலர் கோலங்கள்!

image

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலமிடுவது மிகவும் சிறப்பான விஷயமாகும். ஆனால் கடும் குளிர், திருட்டு சம்பவங்களுக்கு பயந்து இரவிலேயே பெண்கள் கோலம் போடுகின்றனர். ஆனால் இரவில் கோலம் போடுவது தவறு என முன்னோர்கள் எனக் கூறுகின்றனர். எனவே, 5 முதல் 10 நிமிடங்களுக்குள் போடக்கூடிய சில எளிய கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து வீட்டில் முயற்சிக்கவும்.

error: Content is protected !!