News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News December 10, 2025
உலகின் மிக நீளமான ஹைவே இதுதான்!

உலகிலேயே மிக நீளமான சாலை, ‘பான்-அமெரிக்கன்’ ஹைவே என்பது உங்களுக்கு தெரியுமா? இது அலாஸ்காவின் ப்ரூடோ பே(Prudhoe Bay)வில் தொடங்கி, எந்த யூ-டர்னும் இல்லாமல், 14 நாடுகள் வழியாக அர்ஜென்டினா வரை செல்கிறது. 30,000 கிமீ நீளமுள்ள இந்த ஹைவே, மழைக்காடுகள், பாலைவனங்களை தாண்டி செல்கிறது. இந்த சாலையில் முழுமையாக பயணம் செய்துமுடிக்க சுமார் 60 நாள்கள் பிடிக்குமாம்.
News December 10, 2025
விஜய் உடன் கூட்டணி.. அமைச்சர் அறிவித்தார்

புதுச்சேரியில் பரப்புரை செய்த விஜய், அங்கு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பற்றி ஏதும் பேசாமல், அவர்களுடன் கூட்டணியில் உள்ள பாஜகவை மட்டுமே விமர்சித்திருந்தார். இதனால் தவெக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி CM ரங்கசாமிக்கு தான் தெரியும் என்று புதுச்சேரி அமைச்சர் லஷ்மி நாராயணன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
மீண்டும் ரத்து செய்யப்படும் இண்டிகோ விமானங்கள்

இன்று, நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் பெங்களூருவில் இருந்து மட்டும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளது. கடுமையான நெருக்கடிக்குப் பிறகு, தங்களது விமான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக நேற்று, இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் அறிவித்திருந்தார். இந்த சூழலில், விமான சேவைகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


