News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News December 27, 2025
பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

படிக்கும் வயதில் மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் 11-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியதாக கூரியர் நிறுவன ஊழியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி மணிகண்டன் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமாகியுள்ளார். அவரது தாய் அளித்த புகாரின்பேரில், மணிகண்டன் போக்சோவில் சிக்கியுள்ளார்.
News December 27, 2025
பண மழை கொட்டும் 4 ராசிகள்

சந்திர பகவான் இன்று(டிச.27) தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருப்பதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மேஷம்: தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி. *கடகம்: வேலையில் பதவி உயர்வு. வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். *துலாம்: கடன் பிரச்னை தீரும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு. *தனுசு: பண வரவு சீராகும். பழைய கடன்களை ஈசியாக அடைக்க வழி கிடைக்கும்.
News December 27, 2025
வெள்ளி விலை இன்று ஒரேநாளில் ₹31,000 உயர்ந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ₹1,680 அதிகரித்து அதிர்ச்சி அளித்த நிலையில், வெள்ளி 1 கிலோ ₹31,000 அதிகரித்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் ₹20,000 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹11,000 அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி 1 கிராம் ₹285-க்கும், 1 கிலோ ₹2.85 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளி விலை ₹59,000 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


