News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News January 5, 2026
விருதுநகர்: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 5, 2026
வங்கதேச அணியை வழிநடத்தும் இந்து கேப்டன்!

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக KKR அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரகுமான் நீக்கப்பட்டார். எனினும் 2026 WC டி20-யில் வங்கதேச அணி கேப்டனாக இந்துவான லிட்டன் தாஸ் செயல்பட உள்ளதை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விளையாட்டில் அரசியலை புகுத்தி வரும் நிலையில், இந்த முடிவு ஒற்றுமையை விதைப்பதாகவும் கூறுகின்றனர்.
News January 5, 2026
சர்க்கரையை கட்டுப்படுத்தும் ‘கொய்யா இலை தேநீர்’

கொய்யா இலை தேநீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். மேலும் இது உடல்பருமனை கட்டுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவும்: எப்படி செய்வது: தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 4-5 புதிய கொய்யா இலைகளைச் சேர்க்கவும். 2-4 நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி, தேன் சேர்த்தால் ‘கொய்யா இலை தேநீர்’ ரெடி. SHARE IT


