News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News January 8, 2026
மதிய உணவு திட்டத்தில் ₹2,000 கோடி ஊழல்!

ராஜஸ்தானில் பள்ளி மதிய உணவு திட்டத்தில் சுமார் ₹2,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கோவிட் காலத்தில் (காங்., ஆட்சி) இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் விதிகளை மீறி டெண்டர் வழங்கியதோடு, போலி பில்கள் மூலம் அரசு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News January 8, 2026
அதிமுகவுக்கு பிடிகொடுக்காத பிரேமலதா!

தேமுதிக தங்களுடன் கூட்டணி அமைக்கும் என அதிமுக தரப்பு கூறுகிறது. ஆனால், பிரேமலதா பிடிகொடுக்காமல் உள்ளாராம். கடந்த தேர்தலில், ராஜ்யசபா சீட் கிடைக்காததால், இந்த முறை அதை பெற்றே ஆக வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் பிரேமலதா. அதனால் தான், திமுகவுக்கு எதிராக கூட பெரிதாக விமர்சனம் வைக்காமல் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். பொங்கலுக்கு பிறகு இறுதி முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 8, 2026
BREAKING: விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு.. திமுக அதிர்ச்சி

சில நாள்களாகவே ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கட்சினர் பேசி வருவதால், காங்.,- திமுக இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இதன் பின்னணியில், காங்., தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயகன் விவகாரத்தில் பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கிரிஷ் ஷோடங்கர், விஜய் வசந்த் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது இதை உறுதிப்படுத்துகிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது.


