News January 3, 2025

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

image

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.

Similar News

News January 26, 2026

VIT பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா

image

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.26) 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வேந்தர் விஸ்வநாதன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் சிறப்பு விருந்தினர் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 26, 2026

கரூர் விவகாரம்: விஜய்க்கு எச்சரிக்கை

image

விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லாததால்தான் அவருடன் யாரும் சேரவில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அரசியலில் விஜய் 0 மாதிரி என்ற அவர், தனியாக இருந்தால் ஜீரோவுக்கு மதிப்பில்லை, ஆனால் யாருடனாவது சேர்ந்தால் அதற்கு மதிப்பு உண்டு எனவும் கூறியுள்ளார். மேலும் NDA ஆட்சியில் பிரச்னையின்றி விஜய் அரசியல் செய்ய முடியும், ஆனால் DMK ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை அவர் நினைவில் கொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளார்.

News January 26, 2026

₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறும் அசத்தல் திட்டம்

image

உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ செலவு அதிகமாக இருக்கிறதா? மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மூலம் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை பார்க்கலாம். இத்திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சைக்காக ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை கிடைக்கிறது. விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். நண்பர்கள் அனைவருக்கும் இப்பதிவை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!