News January 3, 2025

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

image

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.

Similar News

News January 25, 2026

தேர்தலில் தவெக தனித்து போட்டியா? KAS சூசகம்

image

திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதிசெய்துள்ள நிலையில், இன்னும் தவெக தரப்பில் கூட்டணி முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தவெகவில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தவெக தனித்தே களம் காணும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News January 25, 2026

தமிழகத்தில் ஹிந்திக்கு இடமில்லை: CM ஸ்டாலின்

image

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், ஹிந்தியை திணித்த ஒவ்வொரு முறையும் வீரியத்துடன் போராடி தமிழுக்காக உயிரைவிட்ட தியாகிகளை நன்றியோடு வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

News January 25, 2026

எந்த நேரம், எதற்கு நல்லது?

image

உள்ளுறுப்புகளின் டீடாக்ஸ் கால அட்டவணை: 11pm-1am: பித்தப்பை நச்சுகளை நீக்கும் *1am-3am: இந்நேரம் உறக்கத்தில் இருந்தால், கல்லீரல் உடலின் அனைத்து நச்சுகளையும் நீக்கும் *3am-5am: நுரையீரல் தனது நச்சுகளை நீக்கும் நேரம் *5am-7am: பெருங்குடல் நச்சு நீக்கும் நேரம் *7am-9am: சிறுகுடல் சத்துகளை உறிஞ்சும் நேரம். காலை உணவுக்கு ஏற்றது *9 pm-11pm: நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் நேரம். SHARE IT.

error: Content is protected !!