News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News January 24, 2026
அரசியலா.. நானா.. பதிலளித்த நடிகை

நடிகை பாவனா கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராக களமிறங்குவதாக SM-ல் தகவல்கள் தீயாய் பரவின. இதுகுறித்து பேசிய அவர், இது முற்றிலும் பொய்யான செய்தி எனவும் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லாதபோது, இதுபோன்ற வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இந்த செய்தியை பார்த்து நான் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்றார்.
News January 24, 2026
மணத்தக்காளி கீரையின் நன்மைகள்!

மணத்தக்காளி கீரை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். *செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். *வயிற்று புண், அஜீரணம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். *தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பு ஆகியவற்றை நீக்கும். *நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். *இதில் வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
News January 24, 2026
சீனா கனடாவை தின்றுவிடும்: டிரம்ப்

சீனாவுடன் வணிகம் செய்வது கனடாவுக்கு ஆபத்து என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், கோல்டன் டோம் கிரீன்லாந்தின் மீது கட்டப்பட்டால் அது கனடாவையும் பாதுகாக்கும். இருப்பினும், கனடா அதற்கு எதிராக உள்ளது. ஆனால், இதற்கு பதிலாக சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆவலோடு உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்குள்ளேயே சீனா அவர்களை தின்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.


