News January 3, 2025

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

image

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.

Similar News

News January 16, 2026

முடிவுக்கு வருகிறதா திமுக – காங்., பஞ்சாயத்து?

image

தமிழக தலைவர்களுக்கு டெல்லி <<18869582>>காங்., தலைமை <<>>அவசரமாக அழைப்பு விடுத்தது பேசுபொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக சொந்த கட்சிகாரர்களே திரும்பி இருக்கிறார்; மற்றொருபுறம் விஜய் பக்கம் செல்ல வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது. இது நாளுக்கு நாள் தீவிரமடைவதால்தான், பஞ்சாயத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர டெல்லி தலைமை அவசரமாக அழைத்துள்ளதாம்.

News January 16, 2026

விஜய் உடன் இணைந்த அடுத்த தலைவர்.. இபிஎஸ் அதிர்ச்சி

image

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வேலூர் மாவட்ட Ex மா.செ.,வுமான வாசு தவெகவில் இணைந்துள்ளார். 2006 – 2010 வரை வேலூர்(கி) மா.செ.,-வாக இருந்த இவர், 2009 லோக்சபா தேர்தலில் வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். Ex அமைச்சர் KC வீரமணியின் நம்பிக்கை முகமாக இருந்த இவர், திடீரென செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் இணைந்துள்ளது EPS தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

News January 16, 2026

ஜம்மு-காஷ்மீரின் எல்லை பகுதிகளில் பதற்றம்

image

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், சாம்பா மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், பாக்., ட்ரோன்கள் மீண்டும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரோன் ஊடுருவல் குறித்து <<18852930>>இந்திய ராணுவம்<<>>, சில நாள்களுக்கு முன்புதான் பாக்.-ஐ எச்சரித்தது. இந்நிலையில், மீண்டும் ட்ரோன்கள் பறந்ததால், அவற்றை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!