News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News January 13, 2026
வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருமா தேமுதிக?

2005-ல் கட்சியை தொடங்கிய விஜயகாந்த், 2006 தேர்தலில் DMK, ADMK-வை எதிர்த்து கொண்டே, களத்தில் பாமக, விசிகவையும் ஒரு கை பார்த்தார். அந்த தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்ததுடன் விஜயகாந்தும் வெற்றி பெற்றார். 2011-ல் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, அதன்பின் சரிவை சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு MLA கூட இல்லை. இதை மனதில் வைத்துதான் கூட்டணி அறிவிப்பை பிரேமலதா, தள்ளி வைத்திருக்கிறாராம்.
News January 13, 2026
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்

2025-ம் ஆண்டு நிலவரப்படி பெண்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் இந்தியாவின் சிறந்த நகரங்களின் தரவரிசை பட்டியல் சமீபத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், வாழ்க்கைத் தரம் ஆகியவை அடிப்படையில் நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த நகரங்கள் எந்த இடத்தில் உள்ளன என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
பொங்கல் நாளில் ஜன நாயகன் வழக்கு விசாரணை

சென்சார் விவகாரத்தால் ‘ஜன நாயகன்’ ரிலீஸில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே, சென்னை HC ஆணைக்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு பொங்கல் பண்டிகை நாளான ஜன.15-ல் விசாரணைக்கு வருகிறது. அத்துடன், பொங்கலுக்கு பிறகு கரூர் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்க்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


