News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News January 7, 2026
தமிழகம் வருகிறார் PM மோடி

TN சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜன.28-ம் தேதி PM மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக மாநாட்டில் PM பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் NDA கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
அமித் ஷாவா? அவதூறு ஷாவா? CM ஸ்டாலின் விளாசல்

தமிழ்நாட்டில் இந்து மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய அமித் ஷாவுக்கு CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் அரசு விழாவில் பேசிய அவர், TN-ல் கடந்த 4 ஆண்டுகளில் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதை பாஜக ஆளும் மாநிலங்களில் கூட செய்திருக்க மாட்டார்கள் என்றார். மேலும் இப்படி பொய் குற்றச்சாட்டை வைத்தவர் அமித் ஷாவா, அவதூறு ஷாவா என கேட்க தோன்றுவதாக CM பேசினார்.
News January 7, 2026
சவுதி அரேபியாவில் ஜனநாயகனுக்கு தடையா?

இந்தியாவை போலவே சவுதி அரேபியாவிலும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ளது. அந்த நாட்டில் உள்ள தணிக்கை குழு, படத்தின் சில திருத்தங்களை சொல்லியுள்ளதாம். இதனால், படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வரை அந்நாட்டிலும் படத்துக்கு சென்சார் சான்றிதழ் பெறவில்லையாம். இதனால், படத்தின் வெளியீடு தடைபட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.


