News January 3, 2025

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

image

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.

Similar News

News January 15, 2026

பெண்ணின் திருமண வாழ்க்கையை முறித்த பொய்

image

பொய்யான தகவல்களை சொல்லி நடந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும் என்று ஜார்க்கண்ட் HC தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில், திருமணத்தில் உண்மைகளை மறைப்பது வாழ்க்கை துணையை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம் என்றும் கோர்ட் கூறியுள்ளது. இந்த வழக்கில், உண்மையை மறைத்து பெண் திருமணம் செய்தது உறுதியானதால், கணவர் கோரிய விவாகரத்தை வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதுபற்றி உங்க கருத்து?

News January 15, 2026

9 பாகிஸ்தான் மீனவர்கள் அதிரடி கைது

image

இந்திய கடற்பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் (ICG) அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் ICG விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.

News January 15, 2026

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? EPS

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணி ஒன்றாகவே தேர்தலை சந்திக்கும் என்றும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பதில் சந்தேகம் வந்துவிட்டதாகவும் EPS கூறியுள்ளார். மேலும், பொழுது போக்கிற்காக மட்டுமே திரைப்படம் என்றும், இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் திமுக – அதிமுக பிரியவில்லை. நம் முன்னோர்கள் தான் தமிழ்மொழி காக்க போராடினர். எனவே பராசக்தியை வைத்து கருத்து சொல்ல முடியாது எனவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!