News January 3, 2025

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

image

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.

Similar News

News December 21, 2025

மீண்டும் தெலுங்கில் ரீரிலீஸாகும் தனுஷின் 3

image

2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் 2026, பிப்.6-ல் தெலுங்கில் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2022-ல் தெலுங்கிலும், 2024-ல் தமிழிலும் இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இதனால், ஒரு படம் 3-வது முறையாக ரீரிலீஸ் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். உங்களுக்கு இப்படத்தில் பிடித்த சீன் எது?

News December 21, 2025

BDS அட்மிஷனில் முறைகேடு: ராஜஸ்தான் அரசுக்கு அபராதம்

image

2016 – 17-ல் ராஜஸ்தானில் உள்ள 10 மருத்துவ கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு பர்சண்டைல் முறைகேடாக குறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், விதிமீறல் நிரூபணமானதாக கூறி, 10 கல்லூரிகளுக்கும் தலா ₹10 கோடி அபராதம் விதித்து SC உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இந்த முறைகேட்டை அனுமதித்ததற்காக ராஜஸ்தான் மாநில அரசுக்கும் ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 556 ▶குறள்: மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. ▶பொருள்: ஆட்சியாளருக்கு புகழ் நிலைத்திருக்க காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

error: Content is protected !!