News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News January 11, 2026
கிருஷ்ணகிரியில் கேஸ் புக் பண்ண புது வழி!

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க
News January 11, 2026
#BJPFearsJananayagan டிரெண்டிங்

சென்சார் விவகாரத்தில் ‘ஜன நாயகன்’ வெளியாகுவதில் சிக்கல் எழுந்த நிலையில், விஜய் ரசிகர்கள் பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். சென்சார் போர்டு மூலம் விஜய்க்கு மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், பாஜகவுக்கு பயம் என்ற பொருள்படும் வகையில் #BJPFearsJananayagan என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்பதிவை பதிவிட்டுள்ளனர்.
News January 11, 2026
பள்ளி மாணவிக்கு குழந்தை.. 15 பேர் சிக்கினர்

திருச்சியில் 6 ஆண்டுகளாக உறவினர்களால் 16 வயது சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளார். முதல்முதலாக 2021-ல் 6-ம் வகுப்பு படிக்கும்போது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அதன்பின் தாத்தா, தாய்மாமா, அத்தை மகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவுப்படி, 15 பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.


