News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News January 13, 2026
சிவகார்த்திகேயனுக்கு கால் செய்த ரஜினி

பராசக்தியை ரஜினியும், கமல்ஹாசனும் பாராட்டியதாக SK தெரிவித்துள்ளார். பராசக்தியில் தனது நடிப்பு சிறப்பாக இருந்தது என 5 நிமிடங்கள் வரை கமல்ஹாசன் பேசியதாகவும், அமரனுக்கு கூட இந்தளவு பாராட்டு கிடைக்கவில்லை என நெகிழ்ச்சியாக SK குறிப்பிட்டார். அதேபோல பராசக்தியின் இரண்டாம் பாதி அற்புதமாக உள்ளது என்றும், மிகவும் துணிச்சலான படம் எனவும் ரஜினிகாந்த் வாழ்த்தியதாக அவர் கூறினார். நீங்க படம் பார்த்தாச்சா?
News January 13, 2026
பொங்கல் பரிசை வாரி வழங்கும் அரசியல் கட்சிகள்

விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வாக்குகளை அறுவடை செய்ய DMK, ADMK, BJP பொங்கல் பரிசுகளை வாரி வழங்கி வருகின்றனர். கே.என்.நேரு தரப்பில் 4 தட்டுகள், 4 டம்ளர்கள், 2 சமையல் பாத்திரங்கள், பேன்ட் & சட்டை- சேலை, EX மினிஸ்டர் விஜயபாஸ்கர் தரப்பில் சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொங்கல் கிட், பாஜக தரப்பில் ₹800 மதிப்புள்ள பொங்கல் கிட், செந்தில் பாலாஜி தரப்பில் வெண்கலப் பானைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.
News January 13, 2026
வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருமா தேமுதிக?

2005-ல் கட்சியை தொடங்கிய விஜயகாந்த், 2006 தேர்தலில் DMK, ADMK-வை எதிர்த்து கொண்டே, களத்தில் பாமக, விசிகவையும் ஒரு கை பார்த்தார். அந்த தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்ததுடன் விஜயகாந்தும் வெற்றி பெற்றார். 2011-ல் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, அதன்பின் சரிவை சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு MLA கூட இல்லை. இதை மனதில் வைத்துதான் கூட்டணி அறிவிப்பை பிரேமலதா, தள்ளி வைத்திருக்கிறாராம்.


