News September 30, 2025
பழியை துடைக்கும் பாசிச திமுக: நயினார் நாகேந்திரன்

கரூர் துயர சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான விசாரணை மூலம் கண்டுபிடிப்பதைவிட்டு, மக்களை திசைதிருப்புவதற்கு உயிர் பிழைத்தோரைக் கைது செய்வது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பழியை துடைக்க பாசிச திமுக அரசு வழக்கு பதிவதாகவும், CBI விசாரணை தேவை எனவும் நயினார் கோரியுள்ளார்.
Similar News
News September 30, 2025
₹35,000 சம்பளம்: தமிழக அரசில் 1,096 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகத்தில் காலியாகவுள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 1,096 பணியிடங்களை அறிவித்துள்ளது. கல்வித்தகுதி: 10th, டிகிரி. சம்பளம்: ₹12,000 – ₹35,000 வரை (பதவிகளுக்கேற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.14. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News September 30, 2025
முன் ஜாமீன் கோரும் N.ஆனந்த்

கரூர் பிரசார கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக தவெக நிர்வாகிகள் N.ஆனந்தும், CTR.நிர்மல் குமாரும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காலை 10.30 மணிக்கு முன் ஜாமீன் கோரி மனு அளிக்கவுள்ளனர். ஏற்கெனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரும் ஜாமீன் கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 30, 2025
டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன்: PM

டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு பின் இஸ்ரேல் PM நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் டிரம்பின், காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்பதாக PM மோடி பதிவிட்டுள்ளார். டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால அமைதியை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியால் மோதல் முடிவுக்கு வந்து அமைதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.