News March 16, 2024
உதகையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறும். எனவே விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72 உதகை 643001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் கூட்டம் நடைபெறும்போது விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
நீலகிரி: 12பேரைக் கொன்ற யானையை பிடிக்க தீவிரம்

முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, கடந்த 15ஆம் தேதி, 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற யானையைப் பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் வனச் சரகர்கள், வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து விரிவான தேடுதல் பணி தொடங்கப்பட்டது. யானையின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதனை கண்காணித்து மயக்க ஊசி போட்டு பிடிக்க தயார் நிலையில் உள்ளனர்.
News September 18, 2025
நீலகிரி: டிரெண்டிங் AI போட்டோ எடிட் செய்தால் அபாயம்!

நீலகிரி மக்களே.., Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 18, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்களில் 19 வயதை கடந்தும் முதிர்வு தொகை பெறாதவர்களின் பெயர் பட்டியல் nilgiris.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே முதிர்வு தொகை பெறாதவர்கள் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகையில் இயங்கும் அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.