News March 24, 2025
மே முதல் வாரத்தில் இருந்து ‘உழவரை தேடி‘ திட்டம்!

‘உழவரை தேடி’ வேளாண் நலத்துறை திட்டம் மே மாதத்தில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் திட்டம் அமலாகவுள்ளது. இத்திட்டத்தின்படி, அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் கொண்ட குழு, விவசாயிகளை சந்தித்து பயிர் பாதுகாப்பு, சாகுபடி, மகசூல் குறித்து விளக்கமளிக்கும். மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இதற்கான முகாம் நடக்கும்.
Similar News
News November 19, 2025
அப்பாவானார் பிரபல தமிழ் நடிகர் ❤️❤️❤️

பிரேம்ஜி அமரன் – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். தந்தையான பிரேம்ஜி அமரனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனைவி இந்துவை அவர் காதலித்து கரம்பிடித்தார். இருவருக்கும் கடந்த 2024-ல் திருமணம் நடந்தது. திருத்தணியில் நடந்த இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தம்பதியரை வாழ்த்தலாமே!
News November 19, 2025
TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: ஆதவ் அர்ஜுனா

<<18327587>>ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி<<>> கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக சாடியுள்ளார்.
எங்கும் சுதந்திரமாக சென்று வர முடியாத அளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறுவதாக அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தனி பாதுகாப்பு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 19, 2025
பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு

பிஹாரின் அடுத்த CM ஆக மீண்டும் நிதிஷ்குமாரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். NDA கூட்டணி கட்சி MLA-க்களின் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தேர்வான நிலையில், நாளை காலை 11:30 மணிக்கு நடைபெறும் விழாவில் CM ஆக பதவியேற்கிறார். இந்நிகழ்வில் PM மோடி, பாஜக முதல்வர்கள், MP-க்கள், MLA-க்கள் பங்கேற்கவுள்ளனர்.


