News March 24, 2025
மே முதல் வாரத்தில் இருந்து ‘உழவரை தேடி‘ திட்டம்!

‘உழவரை தேடி’ வேளாண் நலத்துறை திட்டம் மே மாதத்தில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் திட்டம் அமலாகவுள்ளது. இத்திட்டத்தின்படி, அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் கொண்ட குழு, விவசாயிகளை சந்தித்து பயிர் பாதுகாப்பு, சாகுபடி, மகசூல் குறித்து விளக்கமளிக்கும். மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இதற்கான முகாம் நடக்கும்.
Similar News
News November 26, 2025
மக்கள் பழசை விரைவாக மறந்துவிட்டனர்: கம்பீர்

சொந்த மண்ணில் இந்திய டெஸ்ட் அணியின் தொடர் தோல்விக்கு, முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த காலத்தை விரைவாக மறந்துவிட்டதாக வருத்தத்துடன் கம்பீர் தெரிவித்துள்ளார். தனது தலைமையில் – சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் உள்ளிட்டவையில் இளம் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News November 26, 2025
கோவைக்கு NO, புனேவுக்கு YES.. மீண்டும் மெட்ரோ சர்ச்சை!

புனே மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ₹9,858 கோடி மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி, தமிழக அரசு, மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்த அனுமதி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News November 26, 2025
MGR வாக்கு வங்கியை குறிவைக்கிறதா தவெக?

அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த செங்கோட்டையன், சற்றுமுன் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைவதை உறுதி செய்துள்ளார். தன்னை MGR, ஜெயலலிதாவின் விசுவாசி என எப்போதும் கூறி வரும் செங்கோட்டையனை தவெகவில் இணைப்பதன் மூலம், MGR காலத்து அதிமுக வாக்குகளை பெறுவதோடு, தேர்தல் வியூகங்களை சிறப்பாக வகுக்க முடியும் என விஜய் தரப்பு நம்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


