News October 5, 2025

பிரபல தமிழ் எழுத்தாளர் காலமானார்

image

‘குறிஞ்சிசெல்வர்’ என போற்றப்படும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் காலமானார். ‘காட்டுக்குள்ளே இசைவிழா’ எனும் சிறுவர் நூலுக்கு 2012-ல் சாகித்ய அகாடமியின் புரஸ்கார் விருதை பெற்றவர். நாவல், சிறுகதை உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக, அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News October 5, 2025

அதிகரிக்கும் அரியவகை சிறுத்தை – PHOTOS

image

இமாச்சலப் பிரதேசத்தில் வாழும் பனிச்சிறுத்தைகள் உலகின் மிகவும் அரிதான மற்றும் அழகான சிறுத்தை வகையைச் சேர்ந்தது. இதன் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், பல பாதுகாப்பு திட்டங்கள் மூலம் சிறுத்தை வாழ்விடங்களை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, சமீபத்திய கணக்கெடுப்பில், பனிச்சிறுத்தைகள் கடந்த 4 ஆண்டுகளில் 51-இல் இருந்து 83-ஆக உயர்ந்துள்ளன. மேலே உள்ள போட்டோஸ் பிடிச்சா லைக் போடுங்க.

News October 5, 2025

சற்றுமுன்: முடிவை மாற்றினார் விஜய்

image

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக சார்பில் தலா ₹20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினரை நேரில் சந்தித்து வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது திடீர் மாற்றமாக, பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் பணம் செலுத்த விஜய் திட்டமிட்டுள்ளராம். இதனையடுத்து, மக்களை அவர் நேரில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

News October 5, 2025

கரூர் துயரத்துக்கு யார் காரணம்? காஜலின் பதில்

image

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களோடு நடித்தவர். இந்நிலையில், கடைத்திறப்பு விழாவில் பங்கேற்ற அவரிடம் கரூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தனிப்பட்ட முறையில் நான் விஜய்யின் ரசிகை என கூறிய அவர், அரசியல் பேரணி குறித்து நான் என்ன பேசுவது, அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!