News March 16, 2025
பிரபல கவிஞர் காலமானார்.. முர்மு, மோடி இரங்கல்

பிரபல ஒடியா கவிஞரும், ஒடிஷா EX CS-மான ரமாகாந்த் ரத் காலமானார். அவர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கலில், தனது மறக்க முடியாத படைப்புகளால் ரமாகாந்த் அகில இந்திய இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மோடி வெளியிட்ட இரங்கலில், ரமாகாந்த் மறைவு மிகுந்த வேதனையை அளித்ததாக கூறியுள்ளார். ரமாகாந்த், சாஹித்ய அகாடமி, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
Similar News
News March 17, 2025
குடிநீரால் நின்ற திருமணம்.. கண்ணீரில் மணமக்கள்!

இதுக்கெல்லாமா கல்யாணம் நிற்கும் எனச் சிந்திக்க வைக்கிறது இந்த சாம்ராஜ்நகர் சம்பவம். கர்நாடகாவின் ஹிரியூரில் மனோஜ் – அனிதா ஜோடிக்கு நேற்று திருமணம் செய்ய கோலாகலமாக ஏற்பாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த வரவேற்பு விழாவுக்கு தாமதமாக வந்த சிலருக்கு தண்ணீர் பாட்டில் வைக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட மோதலால் கல்யாணமே நின்றுபோய் கடைசியில் கண்ணீருடன் இளம்ஜோடி மண்டபத்தை காலி செய்த அவலம் நடந்துள்ளது.
News March 17, 2025
பாஜகவின் வினோஜ் பி.செல்வம் கைது

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகக்கோரி, அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டத்தில் கலந்துகொள்ள ரெடியாக இருந்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை கைதுசெய்து தனியார் மண்டபத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அதேபோல், பல மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
News March 17, 2025
தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது

விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது. அப்போது, மறைந்த மருத்துவர் செரியன், முன்னாள் உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன் ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மேலும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.