News April 8, 2025

பிரபல நடனக் கலைஞர் ராம் சஹாய் பாண்டே காலமானார்

image

பிரபல நடனக் கலைஞர் ராம் சஹாய் பாண்டே(92) உடல் நலக்குறைவால் காலமானார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இவர் 18 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற நடன நிகழ்ச்சிகளை நடத்தி இந்தியாவின் பெருமையை உலகறிய செய்தவர். இவரது கலைச் சேவையைப் பாராட்டிக் கடந்த 2022-ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ராம் சஹாய் மறைவுக்கு மத்தியப் பிரதேச CM உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 17, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க புதிய விதிகள் அறிமுகம்

image

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால், <<16124391>>அட்சய திருதியை<<>>க்கு தங்கம் வாங்க, நகைக்கடைகள் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளன. அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வரும் போது, முன்பதிவு செய்திருந்த தினத்திலிருந்து அட்சய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு நகை வாங்கிக் கொள்ளலாம் என நகைக் கடைகள் அறிவித்துள்ளன. அதன்படி, பலரும் ஆர்வத்துடன் முன்பணம் செலுத்தி வருகின்றனர்.

News April 17, 2025

3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

image

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. சென்னை, விருதுநகர், மதுரை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. அதேநேரம் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்.

News April 17, 2025

மாநில சுயாட்சி இதற்குத்தான் தேவை: CM ஸ்டாலின்

image

மாநில சுயாட்சி ஏன் அவசியம் என CM ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் அடிப்படை கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக அரசு மாநில அரசுகளை முடக்கப் பார்க்கிறது எனவும், மாநிலங்களின் மொழி, கலாசாரங்களை அழிக்கப் பார்ப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநில சுயாட்சி உரிமைகளை பாதுகாக்க அண்மையில் அவர் குழு அமைத்திருந்தார்.

error: Content is protected !!