News March 15, 2025
பிரபல நடிகர் மறைந்தார்… திரையுலகம் அஞ்சலி

பிரபல பாலிவுட் மூத்த நடிகரும், தயாரிப்பாளருமான தேவ் முகர்ஜி (83), உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் திரண்டு வந்து நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தியபின், அவரது இறுதிச்சடங்கு நடந்தது. அப்போது நடிகர் ரன்பீர் கபூர் அவரது உடலை சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முகர்ஜியின் மகனும் இயக்குநருமான அயன், ரன்பீரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 15, 2025
பெண் எஸ்.ஐ. வன்கொடுமை, வீடியோ.. போலீஸ்காரர் கைது

இமாச்சல பிரதேசத்தில் பெண் எஸ்.ஐ.யை போலீஸ்காரர் பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணி நிமித்தமாக வெளியூர் சென்ற பெண் எஸ்.ஐ. ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அறையை புக் செய்ய உதவிய போலீஸ்காரர், கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை காட்டி மிரட்டி தொடர்ந்து ரேப் செய்துள்ளார். இதுகுறித்து பெண் எஸ்.ஐ. அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
News March 15, 2025
ஓய்வுக்கு பின் என்ன செய்வேன்? – மனம் திறந்த கோலி!

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் விராட் கோலி, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது 36 வயதாகும் அவர், ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார். ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், சக வீரரிடம் இதுபற்றி கேட்டபோது அவரும் இதே பதிலைத் தான் கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், நிறைய பயணங்கள் மேற்கொள்வேன் என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
News March 15, 2025
மகன்களை கொன்ற கொடூரத் தந்தை… அதிர்ச்சிப் பின்னணி!

அப்பாதான் எல்லோருக்கும் முதல் ஹீரோ. ஆனால், ஆந்திராவில் 2 சிறுவர்களுக்கு அப்பாவே வில்லனாகியுள்ளார். காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ONGC ஊழியரான சந்திர கிஷோர், சரியாக படிக்கவில்லை எனக்கூறி தனது 2 மகன்களை வாளி நீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரும் தற்கொலை செய்துள்ளார். 3 பேரின் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. கொடூர தந்தையின் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?