News March 29, 2024

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை

image

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்ற இளைஞர் EMI முறையில் செல்ஃபோன், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை வாங்கியிருந்ததாக தெரிகிறது. தவணையை சரியாக திருப்பி செலுத்தாதால் கடன் கொடுத்தவர் ராஜேஷின் வீடு தேடி வந்து அவரது தாய் & தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Similar News

News December 2, 2025

FLASH: ஆட்டம் காட்டும் பங்குச்சந்தைகள்!

image

பங்குச்சந்தைகள் நேற்று போலவே இன்றும் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 332 புள்ளிகள் சரிந்து 85,308 புள்ளிகளிலும், நிஃப்டி 98 புள்ளிகள் சரிந்து 26,077 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ICICI Bank, Bajaj Finserv, Axis Bank, Reliance உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 5 முதல் 12% வரை குறைந்துள்ளது.

News December 2, 2025

2026 தேர்தலுக்கு பிரேமலதா போடும் புது ரூட்டு

image

தேமுதிக தொண்டர்களை உயர் பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பதே தனது ஆசை என பிரேமலதா கூறியுள்ளார். 2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் எனக் கூறி வரும் அவர், கட்சிக்காக உழைத்த புது முகங்களை வேட்பாளர்களாக களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் என்ற பிம்பம் உடையும் எனவும் பிரேமலதா நம்புவதாக கூறப்படுகிறது.

News December 2, 2025

99% பேருக்கு SIR படிவங்கள் கொடுத்துவிட்டோம்: ECI

image

தமிழகத்தில் நவ.4 முதல் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 99.20% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், 6.35 கோடிக்கும் மேற்பட்டோருக்கு SIR படிவம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதில், 91.49% படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI அறிவித்துள்ளது.

error: Content is protected !!