News March 29, 2024
கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்ற இளைஞர் EMI முறையில் செல்ஃபோன், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை வாங்கியிருந்ததாக தெரிகிறது. தவணையை சரியாக திருப்பி செலுத்தாதால் கடன் கொடுத்தவர் ராஜேஷின் வீடு தேடி வந்து அவரது தாய் & தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
Similar News
News November 7, 2025
உலகை மாற்றப்போகும் 6 கண்டுபிடிப்புகள்!

காற்று மாசுபாடு, பிளாஸ்டிக், அதிக கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் போன்றவற்றால், பூமி தவித்து வருகிறது. இப்படியே சென்றால், வருங்கால சந்ததியினருக்கு நாம் பூமியை கொடுக்க மாட்டோம். வாழும் நரகத்தை தருவோம் எனலாம். அதனை மாற்றி, பூமியை காப்பாற்றும் முயற்சியில் முக்கியமான 6 கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe பண்ணுங்க.
News November 7, 2025
திமுக ஆட்சியில் மகளிர் பாதுகாப்பில் Compromise: இபிஎஸ்

கோவையில் பெண் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை, சென்னையில் மாணவி மாயம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு முற்றிலுமாக Compromise ஆகியிருப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும் பெண்களால் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டு, இது பெண்களுக்கான அரசு என்று கூறும் ஸ்டாலின், அதற்கு கூச்சப்பட வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 7, 2025
நீங்க அடிக்கடி Chest X-ray எடுக்குறீங்களா?

Full body check up செய்யும் போது, பலரும் Chest X-ray எடுப்பார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், இதனை செய்ய வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அடிக்கடி இந்த Chest X-ray எடுப்பதால், கதிர்வீச்சுக்கு ஆளாகலாம் என எச்சரிக்கின்றனர். இதனால் இருமல், காய்ச்சல், TB போன்ற பிரச்னைகள் வரும் அபாயம் உள்ளதாம். எனவே, டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே, இந்த Chest X-ray எடுப்பது சிறந்தது.


