News March 29, 2024
கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்ற இளைஞர் EMI முறையில் செல்ஃபோன், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை வாங்கியிருந்ததாக தெரிகிறது. தவணையை சரியாக திருப்பி செலுத்தாதால் கடன் கொடுத்தவர் ராஜேஷின் வீடு தேடி வந்து அவரது தாய் & தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
Similar News
News November 30, 2025
சளியை கரைக்கும் சிம்பிள் கஷாயம்

சளி வாட்டி வதைக்கும் போது அதில் இருந்து வெளியேற, மாத்திரைகளை தேடி செல்வதே பலரின் வழக்கம். ஆனால் சிம்பிளான கஷாயம் மூலம் சளியை கரைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 கிளாஸ் தண்ணீரில், கிராம்பு -3, மிளகு -3, சுக்குப் பொடி – கால் ஸ்பூன், மஞ்சள் பொடி – 2 சிட்டிகை, பிளாக் சால்ட் – 2 சிட்டிகை, நா.சர்க்கரை – 1 ஸ்பூன் ஆகியவை போட்டு கொதிக்கவிடுங்கள். அது 1 டம்ளராக சுட்டினால் கஷாயம் ரெடி.
News November 30, 2025
உங்களுக்கு செங்கல், எங்களுக்கு செங்கோல்: தமிழிசை

உதயநிதியை, தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதிக்கு செங்கல் என்றால், எங்களுக்கு (பாஜக) செங்கோல் என ஆவேசமாக பேசியுள்ளார். 2026-ல் NDA கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, PM மோடியை அழைத்து வந்து, தமிழக சட்டப்பேரவையில் செங்கோலை நிறுவுவோம் என்றும் அவர் சூளுரைத்தார். அத்துடன், வரும் தேர்தலில் இரட்டை இலையுடன் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
வெற்றியை ருசிக்குமா இந்தியா? இன்று IND vs SA முதல் ODI

SA-க்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா இழந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், இன்று தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரை நிச்சயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்தியா உள்ளது. இதன் மூலம் இந்திய அணி பலமாகவே உள்ளது என்றும் நிரூபிக்க வேண்டியுள்ளது. முதல் ODI இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. KL ராகுல் தலைமையிலான நீலப்படை வெற்றி பெறுமா?


