News March 29, 2024
கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்ற இளைஞர் EMI முறையில் செல்ஃபோன், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை வாங்கியிருந்ததாக தெரிகிறது. தவணையை சரியாக திருப்பி செலுத்தாதால் கடன் கொடுத்தவர் ராஜேஷின் வீடு தேடி வந்து அவரது தாய் & தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
Similar News
News November 21, 2025
50,000 சிறுவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

நல்லது, கெட்டது தெரியாத வயதில் குற்றம் செய்யும் சிறுவர்கள், கூர்நோக்கு இல்லத்தில் பராமரிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கவே தனி சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கூர்நோக்கு நீதி வாரியங்களிலும் மெத்தனம் காட்டப்படுவதால், 50,000 சிறுவர்கள் நீதி கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். நாடு முழுவதும் 362 கூர்நோக்கு இல்லங்களில், 55% வழக்குகள் முடிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
News November 21, 2025
BREAKING: விஜய் உடன் கூட்டணி இல்லை.. முடிவை அறிவித்தார்

TN-ல் கூட்டணி மாற்றம் வேண்டாம் என ராகுல் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 18-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கார்கே இதனை, தமிழக நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் திமுகவுடன் கூட்டணி தொடர்வதாக <<18343041>>செல்வப்பெருந்தகை<<>> நேற்று கூறியிருந்தார். சில நாள்களாக பேசப்பட்டு வந்த காங்., – தவெக கூட்டணி விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
உணவு செரிமானமாக எடுத்துக் கொள்ளும் நேரம் தெரியுமா?

உணவு வயிற்றுக்கு சென்றால் போதும், அதுவாக செரித்துவிடும் என்று நினைப்போம். ஆனால், ஒவ்வொரு உணவு வகையும் நம் உடலில் ‘பயணம்’ செய்ய ஒரு நேரத்தை எடுத்துக்கொள்கிறது. நமது உடலில் ஜீரண மண்டலமும் அப்படித்தான் இயங்கி வருகிறது. அதனால் தான் சரியான முறையில் உணவு உண்ண வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். எந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் ஜீரணமாகின்றன என்பதை தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணி பாருங்க.


