News May 9, 2024
பட்டாசு ஆலை விபத்துகளால் கண்ணீர் சிந்தும் குடும்பங்கள்

தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளால், பல குடும்பங்கள் கண்ணீர் சிந்துகின்றன. தீபாவளிக்காகவும், ஏற்றுமதிக்காகவும், சிவகாசி பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக உற்பத்தி நடைபெறுகிறது. அங்கு போதிய வசதி இல்லாததாலும், கவனக்குறைவாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், இழப்பீடு அறிவிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாததால் சொந்தங்களை இழந்து குடும்பத்தினர் தவிக்கின்றனர்.
Similar News
News August 21, 2025
செல்போன் ரீசார்ஜ்… அடுத்த அதிர்ச்சி கொடுத்த ஜியோ!

ஜியோ, தனது பயனாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அண்மையில் ₹249 ரிசார்ஜ் பிளானை நிறுத்தியதை போலவே, தற்போது ₹799 ரீசார்ஜ் (84 நாள் Validity) பிளானை நிறுத்தியுள்ளது. இதே பிளான், JioSaavn Pro சப்ஸ்கிரிப்ஷனுடன், தற்போது ₹899-க்கு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் ரிசார்ஜ் கட்டணங்களும் 15- 20% வரை உயரும் எனக் கூறப்படுகிறது.
News August 21, 2025
பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு

PM, CM தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவியில் இருந்து நீக்கம் செய்யும் மசோதாவுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால், அவர்களது பதவி பறிக்கப்படுவது சரிதானே; அப்போதுதான் ஒழுங்கு இருக்கும், இதுபோன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்த்திருத்தங்கள் தேவை எனவும் கூறியுள்ளார்.
News August 21, 2025
மாநாடு: பெண்கள் பாத்ரூமை ஆண்கள் பயன்படுத்தும் நிலை

தவெக மாநாட்டுத் திடலில் பெண்கள் கழிப்பறையை ஆண்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே குடிநீர் குழாயில் காற்று மட்டுமே வருவது, ஸ்நாக்ஸ் அனைவருக்கும் செல்லாமல் இருப்பது என சில குறைகள் கூறப்படுகின்றன. வெயிலும் கொளுத்துவதால் தொண்டர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.