News May 25, 2024

மின் கட்டணம் தொடர்பாக போலி SMS

image

மின் கட்டணம் தொடர்பான போலி SMS மீண்டும் உலா வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, போலி SMS-இல் இருக்கும் எந்த லிங்கையும் க்ளிக் செய்ய வேண்டாம். அதில் இருக்கும் எண்ணைத் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே நல்லது. மின்கட்டணத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே செலுத்த வேண்டும். உதவிக்கு, 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 4, 2026

சூடு சொரணை இல்லாத காங்கிரஸார்: விஜயதரணி

image

காங்கிரஸில் இன்று 99% பேர் திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்வதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். சூடு சொரணை இல்லாத 1% பேர்தான் திமுக அரசிடம் சில பல சலுகைகளை அனுபவித்துக்கொண்டு அங்கு இருக்க வேண்டும் என சொல்கிறார்கள் என சாடியுள்ளார். 23 வருடமாக தன் இளமை காலத்தையெல்லாம் காங்கிரஸில் செலவு செய்ததாகவும், மக்கள் பணி செய்ய நினைத்தபோது இடையூறு தந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 4, 2026

திமுக காங்கிரஸ் இழுபறி இன்று முடிவுக்கு வருமா?

image

திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பெரும் இழுபறியில் உள்ளது. மற்றொரு பக்கம் தவெக தரப்பிலும் காங்கிரஸ் பேசி வருவதாக செய்தி வெளியானதால் அக்கட்சி நிர்வாகிகளே குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் திமுக – காங்., பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக தரப்பில் அதிகபட்சமாக 29 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 4, 2026

வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க

image

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 விரைவில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளின் விவரங்கள் மாறியிருந்தால் அடுத்த தவணையை பெற முடியாது. எனவே, உங்கள் விவசாய அடையாள அட்டையில் எண்ணில் உள்ள ஆதார் எண், புதிய வங்கிக் கணக்கு, மாற்றப்பட்ட முகவரி என ஏதேனும் மாறியிருக்கிறதா என செக் செய்யவும். மாற்றமிருப்பின், வேளாண் அலுவலகத்திற்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.

error: Content is protected !!