News March 26, 2025
கள்ளக்காதல்: யோகா டீச்சரை தீர்த்துக் கட்டிய வீட்டு ஓனர்!

ஹரியானாவில் மாயமான யோகா டீச்சர் ஜெகதீப் 3 மாதங்களுக்குப் பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 7அடி ஆழ போர்வெல் பள்ளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூரமான கொலையை செய்தவர் ஜெகதீப் குடியிருந்த வீட்டு ஓனர் ஹர்தீப். தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் தீர்த்துக் கட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2025
சு.வெங்கடேசன் எம்பியின் தந்தை உடல் தகனம்

மதுரை எம்பி சு.வெங்கடேசனின் தந்தையும், சிபிஎம் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்புராம் (76), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அன்னாரது இறுதி நிகழ்ச்சி ஹார்விபட்டியில் உள்ள இல்லத்தில் நடந்தது. இதையடுத்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. RIP
News March 29, 2025
அதிமுகவுடன் கூட்டணி பேசி வருகிறோம்: அமித்ஷா தடாலடி

ADMK – BJP கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருவதை அமித்ஷா உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும், DMK அரசின் நடவடிக்கையால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை என EPS கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News March 29, 2025
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக உதவி எண்கள்

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருப்பவர்கள் 18003093793 என்ற எண்ணிலும், வெளிநாட்டில் இருப்பவர்கள் +918069009901 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம்.