News April 17, 2024
சத்தீஸ்கரில் போலி என்கவுன்டர்கள்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நேற்று நடந்த தாக்குதலில் 29 நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நக்சலைட்டுகளுக்கு எதிராகத் தங்கள் அரசு திறம்பட நடவடிக்கை எடுத்து வந்ததாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் கூறியுள்ளார். மேலும், தற்போது மாநிலத்தில் போலி என்கவுன்டர்கள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Similar News
News January 26, 2026
ஊழல் பல்கலை.,யின் வேந்தர் PM மோடி: உதயநிதி

இந்தியாவில் ஊழலுக்கு ஒரு பல்கலை., இருந்தால் அதற்கு PM மோடி தான் வேந்தர் என உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு குறித்தும், ஊழல் குறித்தும் பேச PM மோடி, அமித்ஷாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை வைத்துக் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மோடி முயல்வதாகவும் சாடியுள்ளார்.
News January 26, 2026
FLASH: அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை.. உறுதியானது

அதிமுக கூட்டணியில் விஜய் இணையப்போவதில்லை என்பதை நேற்றைய <<18953053>>காட்சிகள் உறுதி செய்துள்ளன<<>>. நேற்று முன்தினம் வரை விஜய்க்கு அழைப்பு விடுத்து வந்த அதிமுக, பாஜக தலைவர்கள், நேற்றைய செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு விஜய்யை வசைபாட தொடங்கியுள்ளனர். ஒருபடி மேல் போய் <<18957237>> விஜய்யை ஊழல்வாதி<<>> என அதிமுக விமர்சித்துள்ளது. இது, வரும் தேர்தலில் விஜய் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
News January 26, 2026
குடியரசு தினம் ஏன் ஜன.26ல் கொண்டாடப்படுகிறது?

இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றாலும், அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வர 1950 வரை ஆனது. 1930 ஜனவரி 26 அன்றுதான் இந்திய தேசிய காங்கிரஸ் ’முழு சுதந்திரம்’ தீர்மானத்தை முதன்முதலில் அறிவித்தது. அந்த நாளைக் கௌரவிக்கவே குடியரசு தினம் ஜன.26-ல் கொண்டாடப்படுகிறது. மேலும் டெல்லியில் இன்று தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம், ஜன.29-ம் தேதி மாலை நடைபெறும் கோலாகல இசை அணிவகுப்புடன் தான் நிறைவடையும்.


