News April 8, 2025
தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.
Similar News
News December 17, 2025
6 குழந்தைகளுக்கு HIV: மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

ம.பி., சத்னா மாவட்ட ஹாஸ்பிடலில், தாலசீமியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. <<18106277>>ஜார்கண்ட்<<>> போல, இங்கேயும் குழந்தைகளுக்கு HIV தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுக்க பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 17, 2025
சுப்மன் கில் OUT.. பிளேயிங் 11 மாற்றமா?

SA-வுக்கு எதிரான 4-வது டி20-ல், கில்லுக்கு பதிலாக சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கைஃப், பத்ரிநாத் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். கடந்த 18 டி-20 போட்டிகளில், கில் ஒன்றில் கூட 50 அடிக்கவில்லை. நடப்பு தொடரிலும் 4(2), 0(1), 28(28) என 32 ரன்களே எடுத்துள்ளார். டி-20 WC-க்கு 2 மாதங்களே உள்ளதால், கில்லுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிளேயிங் 11-ல் யார் இடம்பெறணும்?
News December 17, 2025
பனீர் சாப்பிட பிடிக்குமா.. கொஞ்சம் கவனியுங்க!

இந்தியாவில் 83% போலியான பனீரே விற்கப்படுகின்றன என்ற ஷாக்கிங் தகவலை FSSAI தெரிவித்துள்ளது. இது மைதா, ArrowRoot powder, Urea ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறதாம். பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலியானது. அதுவே ஒரிஜினலாக இருந்தால், அது பனீர் மீது படிமமாக தேங்கி நின்றுவிடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.


