News April 8, 2025

தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

image

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.

Similar News

News December 4, 2025

BREAKING: ஒரு மணி நேரத்தில் மாற்றிய செங்கோட்டையன்

image

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்த பதிவை, <<18466560>>செங்கோட்டையன் <<>>பிற்பகல் 12.26 மணிக்கு நீக்கியிருந்தார். தவெக கொள்கை தலைவர்கள் உடன் MGR, ஜெ., புகைப்படமும் இருந்ததால் நீக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து, கட்சி மாறிய உடன் ஜெ., போட்டோவை நீக்கியதாக பலரும் கமெண்ட் செய்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் நீக்கப்பட்ட போஸ்டரை மீண்டும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News December 4, 2025

வா வாத்தியார் படத்தை வெளியிட தடை!

image

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வரும் 5-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை கட்டிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என அர்ஜுன்லால் என்பவர் தொடர்ந்த வழக்கில், தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்தி, ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.

News December 4, 2025

Thalaivar 173-ஆல் அப்செட் ஆனாரா லோகேஷ் கனகராஜ்?

image

‘Thalaivar 173’ படத்துக்கான உத்தேச இயக்குநர் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பது லோகேஷ் கனகராஜுக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து, ரஜினிக்காக எழுதி வைத்திருந்த கதையைதான் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் செய்து அல்லு அர்ஜுனுக்கு ஏற்றதுபோல அவர் மாற்றியிருக்கிறாராம். இந்த நிலையில் கடந்த வாரம் மும்பையில் அல்லு அர்ஜுனை சந்தித்த லோகி, அவரிடம் கதையை சொல்லி ஒப்புதலும் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!