News April 8, 2025
தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.
Similar News
News November 26, 2025
இந்தியாவின் முதல் தானியங்கி டிரோன் எதிர்ப்பு வாகனம்

ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திரஜால் நிறுவனம், நாட்டின் முதல் AI-ஆல் இயங்கும் தானியங்கி டிரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. எதிரிநாடுகளின் டிரோன்களை கண்காணித்து, தாக்கி அழிக்கும் வல்லமையை இது கொண்டுள்ளது. சமீபகாலமாக, பாகிஸ்தானில் இருந்து டிரோன் வழியாக ஆயுதங்கள், போதைப்பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அதற்கு தீர்வாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
விஜய் கட்சியில் இணையும் அடுத்த முக்கிய தலைவர்!

தமிழக அரசியல் களம் நாளை பல முக்கிய மாற்றங்களை சந்திக்க காத்திருக்கிறது. அதிமுக Ex அமைச்சர் KA செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் நாளை காலை தவெகவில் இணைய உள்ளார். அவருடன் Ex MP சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைய உள்ளனர். அதேபோல், புதுச்சேரி Ex பாஜக மாநிலத் தலைவரும், Ex MLA-வுமான சாமிநாதனும் தனது ஆதரவாளர்களுடன் விஜய் கட்சியில் இணையவுள்ளார்.
News November 26, 2025
தமிழ்நாட்டில் இப்போ இதுதான் TRENDING நியூஸ்

*அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
*விஜய்யை சந்தித்து செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை.
*இந்தியா படுதோல்வி; ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பிரிக்கா
*<


