News April 8, 2025
தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.
Similar News
News November 27, 2025
உதயநிதிக்கு CM ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்

கொள்கைப் பற்றோடு உழைப்பால் உயரும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். DCM பற்றி கட்சியினர் பாராட்டுவதாக கூறிய அவர், அதை கேட்கும்போது தந்தையாக மட்டுமல்லாமல் தலைவனாகவும் மகிழ்வதாக தெரிவித்துள்ளார். மேலும், காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காக களத்தில் நிற்பவனாக திகழ வேண்டும் என DCM-க்கு அட்வைஸ் செய்துள்ளார்.
News November 27, 2025
தவெகவில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் வெவ்வேறு கட்சிகள் இல்லை, 2-ம் ஒன்று போலவே செயல்படுகிறது என செங்கோட்டையன் கூறியுள்ளார். தூய்மையான ஆட்சி TN-ல் உருவாக வேண்டும் என தெரிவித்த அவர், அதனால்தான் ’அன்பிற்கினிய இளவல்’ விஜய்யின் கட்சியில் இணைந்ததாகவும் பேசியுள்ளார். மேலும், 2026-ல் மக்களால் மாபெரும் புரட்சி நடக்கும் எனவும் மக்களால் வரவேற்கப்படுகிற விஜய் வெற்றிபெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
பிரபல தமிழ் நடிகைக்கு 2-வது திருமணம் ❤️(PHOTOS)

பிரபல தமிழ் நடிகை சம்யுக்தாவிற்கு கிரிக்கெட்டர் அனிருதா ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சம்யுக்தா ஷான், விஜய்யுடன் வாரிசு, விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த் 2008- 15 வரை IPL-ல் விளையாடியுள்ளார். இவர்களது திருமணத்திற்கு திரைத்துறையினர் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


