News April 8, 2025

தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

image

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.

Similar News

News April 17, 2025

மாநில சுயாட்சி இதற்குத்தான் தேவை: CM ஸ்டாலின்

image

மாநில சுயாட்சி ஏன் அவசியம் என CM ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் அடிப்படை கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக அரசு மாநில அரசுகளை முடக்கப் பார்க்கிறது எனவும், மாநிலங்களின் மொழி, கலாசாரங்களை அழிக்கப் பார்ப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநில சுயாட்சி உரிமைகளை பாதுகாக்க அண்மையில் அவர் குழு அமைத்திருந்தார்.

News April 17, 2025

துப்பாக்கிச் சுடுதல்: பதக்க வேட்டையில் இந்தியா..!

image

பெருவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளினர். மகளிருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அதே பிரிவில், 242.3 புள்ளிகள் உடன் மனு பாக்கர் வெள்ளி வென்றார். ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.

News April 17, 2025

ADMK-ல் அடுத்தடுத்த மாற்றம்.. இபிஎஸ்-க்கு TTV ஆதரவு!

image

எதிரெதிர் துருவங்களாக இருந்த எடப்பாடியும், டிடிவி-யும் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது அதிமுகவினருக்கு நிம்மதியை அளித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை <<16121092>>இபிஎஸ் வாபஸ்<<>> பெற்றது, அதிமுக அழிந்துவிடாமல் இபிஎஸ் பாதுகாக்கிறார் என டிடிவி பேசியது என அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், ஓபிஎஸ், சசிகலாவும் விரைவில் அதிமுகவில் இணையலாம் எனத் தெரிகிறது.

error: Content is protected !!