News April 8, 2025
தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.
Similar News
News November 1, 2025
தெருநாய்கள் விவகாரம்: தமிழக அரசு பதில் மனு

தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதில், TN-ல் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, மாநகராட்சிகளில் மட்டும் 91 கருத்தடை மையங்கள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
News November 1, 2025
அதிக கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள்

பிஹார் தேர்தலுக்காக பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கொலை உள்பட அதிக குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளராக RJD வேட்பாளர் ரித்லால் ராய் (30 வழக்குகள்) உள்ளார். அவருக்கு அடுத்ததாக, JD (United) வேட்பாளர் ஆனந்த் சிங்கிற்கு எதிராக 28 கிரிமினல் வழக்குகளும், RJD வேட்பாளர் கரன்வீர் சிங்கிற்கு எதிராக 15 கிரிமினல் வழக்குகளும் உள்ளது வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.
News November 1, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

வங்கிகளில் லோன் வாங்கியவர்களுக்கு நவம்பரில் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அக்டோபரில் இந்தியன் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI இந்த மாதம் முதல் குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பயனளிக்கும். SHARE IT.


