News April 22, 2025
அன்வர் ராஜா விலகல் என பரவும் போலி கார்டு!

அதிமுகவிலிருந்து Ex MP அன்வர் ராஜா விலகியதாக சமூக வலைத்தளங்களில் போலி நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில் அது முற்றிலும் தவறான தகவல் என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அன்வர் ராஜா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News April 22, 2025
ஏப்.25-ல் அதிமுக மாவட்ட செயலாலர்கள் கூட்டம்!

வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ராயபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4:30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக வலுவான தொகுதிகள், பலவீனமான தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம்.
News April 22, 2025
ஜாதி சான்றிதழில் எழுத்துப் பிழை கூடாது: ஐகோர்ட்

ஜாதி சான்றிதழில் சாதி பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ‘இசை வேளாளர்’ என்ற சாதியின் பெயரை ‘இசை வெள்ளாளர்’ எனக் குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மாநில அரசு பிழையின்றி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
News April 22, 2025
தங்கம் போல் உயரும் எலுமிச்சை: கிலோ ₹150

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இளநீர், எலுமிச்சை என பழச்சாறுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் பெரும்பாலும் தாகம் தணிக்க நம்புவது எலுமிச்சை ஜூஸ்தான். இந்தச் சூழலில், ஒரு கிலோ எலுமிச்சை விலை ₹150 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று ஒரு கிலோ ₹120க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ₹30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், சாமான்ய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.