News January 20, 2025

Fact Check: இந்தியாவில் ₹5 நாணயங்களுக்கு தடையா?

image

இந்தியாவில் ₹5 நாணயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் வதந்திகள் வலம் வருகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கி ₹5 நாணயங்களுக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. அதே சமயம், நிக்கல் உலோகத்தாலான தடிமனான ₹5 நாணயங்களை சிலர் வங்கதேசத்திற்கு கடத்தி பிளேட் தயாரித்து விற்கிறார்களாம். அதனால், நிக்கல் உலோகத்தாலான ₹5 நாணயங்களின் உற்பத்தியை RBI நிறுத்தி வைத்துள்ளது.

Similar News

News August 25, 2025

நாளை பள்ளி மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு

image

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் (Re-total), மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. மார்க்கில் மாற்றம் இருக்கும் தேர்வர்களின் பட்டியல் நாளை(ஆக.26) பிற்பகலில் வெளியாகவுள்ளது. மாற்றம் இல்லாதவர்களின் பதிவெண்கள் பட்டியலில் இடம்பெறாதாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் Notification பகுதியில் புதிய மார்க்கை அறியலாம். All the best மாணவர்களே

News August 25, 2025

பெண்கள் நிலம் வாங்க ₹5 லட்சம் மானியம்..!

image

ஆதி திராவிடர், பழங்குடியின பெண்கள் நிலம் வாங்க தமிழக அரசு ₹5 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. *ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *விவசாய தொழில் செய்பவராக இருக்க வேண்டும். *தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருக்கக் கூடாது. *விண்ணப்பதாரர் நிலமற்றவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள மகளிர், www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News August 25, 2025

நாளை இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

image

ஒருபுறம் தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் எனவும், மறுபுறம் பல மாவட்டங்களில் வெப்பநிலை 2- 3 செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. நாளை முதல் 29-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட 4 இடங்களில் இன்றே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால், நாளை முதல் காலை 11 மணி – பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.

error: Content is protected !!