News August 25, 2024
E-FIR மூலம் பெண்கள் புகார் அளிக்க வசதி: மோடி

வீட்டில் இருந்து E-FIR மூலம் பெண்கள் புகார் அளிக்க வசதி இருப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறினார். காவல்நிலையம் செல்ல விரும்பாத பெண்கள், வீட்டில் இருந்து புகார் அளிக்கலாம், அதில் யாரும் திருத்தம் செய்ய முடியாது என்றும் உறுதியளித்தார்.
Similar News
News August 16, 2025
கால்களை வலுவாக்கும் உட்கட்டாசனம்!

✦கால்களை பலப்படுத்தவும், மூச்சுக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகிறது.
➥பாதங்களை அருகருகே வைத்து, நேராக நிற்கவும். மூச்சை உள்ளிழுத்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும்.
➥கைகளை உயர்த்தும் போது, இடுப்பை Chair போன்ற நிலைக்கு, கீழே இறக்கவும்.
➥இந்த நிலையில் 20 விநாடிகள் இருந்து விட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும்.
News August 16, 2025
நடிகை கஸ்தூரி தேர்தலில் போட்டி?

நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். விரைவில் 2026 தேர்தல் வரவுள்ள நிலையில், அதில் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தான் நினைக்கவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார். அத்துடன், திமுகவை வீழ்த்த அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமகவும் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
News August 16, 2025
திமுகவின் காலை உணவுத்திட்டம் தோல்வி: சீமான்

அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் திமுக தவறிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். இதன் விளைவாக தான் 207 பள்ளிகள் மூடப்படதாகவும் கூறினார். காலை உணவுத் திட்டம் துவங்கிய பின் அரசுப்பள்ளிகள் மூடப்படுவது அத்திட்டத்தின் தோல்வியை காட்டுவதாகவும், தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி தரத்தை அரசுப்பள்ளிகள் தரமுடியாமல் போனது திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் தோல்வி என்றார்.