News December 2, 2024
தீவிரவாத கருத்து: 10,500 சமூகவலைதள முகவரி முடக்கம்

10,500 சமூகவலைதள பக்க முகவரிகளை (URL) மத்திய அரசு முடக்கியுள்ளது. காலிஸ்தான் பிரிவினை குறித்து 3 ஆண்டுகளாக தகவல் பரப்பியதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை அரசு தடை செய்துள்ளது. காலிஸ்தான் குறித்த தகவல்களை பரப்பி வந்த ஏராளமான செயலிகளையும் அரசு முடக்கியுள்ளது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்த தகவல்களை பரப்பிய 2,100 முகவரிகளையும் முடக்கியுள்ளது.
Similar News
News August 25, 2025
‘நீங்கா நினைவில் வாழும் அண்ணன்’.. விஜய் வாழ்த்து

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை நினைவுகூர்ந்து திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் பற்றி தவெக தலைவர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நீங்கா நினைவில் வாழும் அண்ணன், புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
ஆண்களுக்கு உதவும் சட்டங்கள்.. நோட் பண்ணிக்கோங்க!

குடும்ப தகராறுகளில் பாதிக்கப்படும் ஆண்களுக்காக உதவும் BNS சட்டங்கள்:
◆115(2): ஒரு பெண், ஆணுக்கு உடல் ரீதியாக துன்புறுத்தலை கொடுத்து கொடுமைப்படுத்தியது நிரூபணமானால், ஒரு வருட சிறையும், ₹10,000 அபராதமும் விதிக்கப்படும்.
◆206: ஆணுக்கு எதிராக குடும்ப தகராறில், பெண் பொய் சாட்சி அளித்தது நிரூபிக்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
News August 25, 2025
10 மாசமா EMI கட்டவில்லை.. ரவி மோகன் பங்களா ஜப்தி?

சென்னை ECR-ல் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பங்களாவுக்காக பெற்ற கடன் தொகையின் EMI-யை 10 மாதங்களாக அவர் கட்டாததன் காரணமாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரியர் பாய் கொண்டு சென்ற நோட்டீஸை வாங்காமல், வங்கியில் வந்து நோட்டீஸ் பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் தரப்பு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.