News October 25, 2024
திருமணத்தை மீறிய உறவு… ஏன்?

திருமணத்தை மீறிய உறவு ஏற்பட இவை முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்: *இளம்வயதில் திருமணம் *விருப்பமில்லாத திருமணங்கள் *உடல்ரீதியான திருப்தியின்மை (60%) *உணர்வுரீதியாக தம்பதியினர் ஒன்றாதது *பொதுவான விழுமியங்கள் இல்லாதது *வாழ்க்கை முன்னுரிமைகளில் மாறுபாடு *பொதுவான ஆர்வங்கள் இல்லாதது *‘த்ரில்’ தேடும் மனநிலை *புறக்கணிப்பு (அ) அங்கீகரிக்கப்படாத உணர்வு *குழந்தை வளர்ப்பு சிரமம். வேறு காரணங்கள்?
Similar News
News November 26, 2025
நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட நவம்பர்-2025-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 28.11.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News November 26, 2025
மும்பை தாக்குதலில் 166 பேர் மரணம்.. தீராத சோகம்

இந்தியாவின் இதயத்தை கிழித்த 26/11 மும்பை தாக்குதல் நடந்த தினம் இன்று. 2008 நவம்பர் 26-ல், LeT அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல்வழியாக மும்பைக்குள் நுழைந்து CST ரயில் நிலையம் உள்பட பல இடங்களை கைப்பற்றினர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 166 பேரின் உயிர் அநியாயமாக பறிபோனது. 60 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த தாக்குதலில், கடைசியில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார்.
News November 26, 2025
சீனா விவகாரத்தில் மோடி பேசுவாரா? தமிமுன் அன்சாரி

அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனக்கூறி, இந்திய பெண் அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது நம் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு, நமது பதில் என்ன, இதுகுறித்து PM மோடி பேசுவாரா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாய் திறப்பாரா என கேள்வி எழுப்பினார்.


