News April 15, 2024

கடைசி நாளில் கூடுதல் அவகாசம்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கடைசி நாள் பிரசாரத்தன்று கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோடை வெயிலை கருத்தில் கொண்டு கடைசி நாளன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

Similar News

News September 18, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News September 18, 2025

இலவச பயிற்சியுடன் வேலை: உடனே விண்ணப்பிங்க

image

கம்யூட்டர் சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளை தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் வழங்குகிறது. ServiceNow Developer, Salesforce Developer ஆகிய 2 சான்றிதழ் படிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் கோவை KPR பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. ServiceNow Developer பயிற்சிக்கு இந்த <>லிங்கிலும்<<>>, Salesforce Developer-க்கு லிங்கிலும் விண்ணப்பிக்கலாம்.

News September 18, 2025

BREAKING: மீண்டும் கூட்டணியில் OPS, TTV?

image

NDA கூட்டணியில் OPS, TTV, சசிகலா இணைவார்களா என்ற கேள்விக்கு EPS நேரடியாக பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பெரிய கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பான ஒன்றுதான்; கூட்டணி, உள்கட்சி விவகாரம் குறித்து நாங்கள் பேசி முடிவு எடுத்துக்கொள்வோம் என்று நேரடியாக இல்லாமல் சூசகமாக பதிலளித்தார். இதனால், OPS, TTV மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!