News April 15, 2024

கடைசி நாளில் கூடுதல் அவகாசம்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கடைசி நாள் பிரசாரத்தன்று கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோடை வெயிலை கருத்தில் கொண்டு கடைசி நாளன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

Similar News

News November 28, 2025

₹40,000 சம்பளத்தில் வேலை.. APPLY NOW!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: B.E/B.Tech, B.Pharm. வயது வரம்பு: 40. தேர்வு முறை: Written Test, Interview, Document Verification. சம்பளம்: ₹42,478. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.25. விருப்பமுள்ளவர்கள் <>www.rites.com<<>> இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கு SHARE THIS.

News November 28, 2025

ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி: செங்கோட்டையன்

image

2026 தேர்தலில் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி எனவும் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் சிலர் தவெகவில் இணைய உள்ளதாக பரவும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என சூசகமாக பதில் அளித்துள்ளார்.

News November 28, 2025

டிரம்ப் செயலால் 19 நாடுகளுக்கு வந்த புதிய சிக்கல்

image

வெள்ளை மாளிகை அருகே நடந்த <<18400484>>துப்பாக்கிச்சூட்டை<<>> தொடர்ந்து, ஆப்கானியர்களின் <<18401691>>குடியேற்றத்துக்கு <<>>டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பர்மா, ஈரான், ஹைட்டி, சோமாலியா, சூடான், யேமன், கியூபா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து வந்தவர்களின் கிரீன் கார்டுகளை முழுமையாக பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, காயமடைந்த வீரர்களில் ஒருவர் உயிரிழந்ததாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!