News April 15, 2024
கடைசி நாளில் கூடுதல் அவகாசம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கடைசி நாள் பிரசாரத்தன்று கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோடை வெயிலை கருத்தில் கொண்டு கடைசி நாளன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 2, 2025
99% பேருக்கு SIR படிவங்கள் கொடுத்துவிட்டோம்: ECI

தமிழகத்தில் நவ.4 முதல் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 99.20% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், 6.35 கோடிக்கும் மேற்பட்டோருக்கு SIR படிவம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதில், 91.49% படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI அறிவித்துள்ளது.
News December 2, 2025
மக்கள் நாயகன் காலமானார்

தேசத்திற்காக எண்ணற்ற போர்களில் களம் கண்ட Lt Col ஜம்வால் (100) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் இந்திய ராணுவம் & இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். 1947-48 இந்தோ-பாக் போரின் போது, C படைப்பிரிவின் குதிரைப்படை தளபதியாக செயல்பட்ட ஜம்வால், கடினமான zojila கணவாயை கடந்து எதிரிகளை தாக்கினார். நாட்டை காத்த ரியல் ஹீரோ மறைவுக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
News December 2, 2025
IPL 2026: அடுத்தடுத்து விலகும் முன்னணி நட்சத்திரங்கள்!

மேக்ஸ்வெல்லை PBKS அணி தக்கவைக்காத நிலையில், அவர் தனது பெயரை IPL மினி ஏலத்திற்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் 2026 தொடரில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அதே போல, KKR வீரர் <<18444409>>மொயின் அலி<<>>யும், PSL தொடரில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகையால், அவரும் IPL-ல் விளையாட மாட்டார். முன்னதாக, KKR-ன் ரஸல் ஓய்வை அறிவித்த நிலையில், DC-ன் டூ பிளெஸ்ஸிஸ் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.


