News March 28, 2024
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்

பிளஸ் 2 கணித வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற கணிதப்பாடத்திற்கான வினாத்தாளில் கேள்வி எண் 17, 25 மற்றும் 47 ஆகியவை தவறாக கேட்கப்பட்டிருந்ததாக கணித ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். எனவே அந்த கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுமென கூறப்படுகிறது.
Similar News
News November 18, 2025
நாளை தமிழகம் வருகிறார் PM மோடி

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை(நவ.19) PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
நாளை தமிழகம் வருகிறார் PM மோடி

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை(நவ.19) PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் இன்று (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


