News May 17, 2024
பொது இடமாறுதலுக்கான அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் பாதிரியார் கைது

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் ஒத்தாசை மாதா ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் பன்னீர்செல்வம். இவர் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக ஸ்ரீவை. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் பாதிரியார் பன்னீர்செல்வம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News November 28, 2025
DKS-ஐ மறைமுகமாக தாக்கிய சித்தராமையா

தன்னை CM ஆக்க <<18401800>>காங்., வாக்கு கொடுத்தது<<>> என்பதுபோல பதிவிட்டு பிறகு அதை நீக்கியிருந்தார் டி.கே.சிவக்குமார். இந்நிலையில், கர்நாடகா மக்கள் கொடுத்த பொறுப்பு 5 ஆண்டுகளுக்கானது எனவும், காங்.,ம் தானும் அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி வருவதாகவும் சித்தராமையா X-ல் பதிவிட்டிருக்கிறார். மேலும், கர்நாடகாவுக்கு காங்., கொடுத்தது வெறும் வாக்கு அல்ல, அது இந்த உலகத்தை விட பெரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
சருமம் பளிச்சிட உதவும் மாதுளை தேநீர்!

சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க, ரத்த சர்க்கரை அளவு குறைய, மழைக்காலத்தில் அதிகரிக்கும் கீழ்வாத பிரச்னைகளுக்கு இந்த மாதுளை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலர்ந்த மாதுளை தோல், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக்கி நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இவற்றை வடிகட்டி, அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்தால், சுவையான மாதுளை தேநீர் ரெடி. SHARE IT.


