News May 3, 2024

ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிப்பு

image

ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்துக்குள் முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக மேற்கொள்ளலாம், அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய ரூ.25 வசூலிக்கப்படும், ஆஃப் லைனில் திருத்தம் செய்ய ரூ.50 வசூலிக்கப்படுமென்று ஆதார் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்: IMD

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, தி.மலை, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!

News August 14, 2025

தூய்மை பணியாளர்களுக்கான 6 அறிவிப்புகள்

image

*தூய்மை பணியாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனித் திட்டம். *பணியின் போது இறக்க நேரிட்டால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம். *சுய தொழில் தொடங்குவோருக்கு ₹3.50 லட்சம் மானியம். கடனை தவறாமல் செலுத்தினால் 6% வட்டி மானியம். *குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அனைத்து கட்டணங்களும் வழங்கும் வகையில் ‘புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்’. *வசிப்பிடத்திலேயே சொந்த வீடு. *இலவச காலை உணவு.

News August 14, 2025

‘ஓரணியில் தமிழ்நாடு’ OTP பெற தடை நீட்டிப்பு

image

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் OTP பெற இடைக்காலத் தடை தொடரும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், DMK தரப்பில் OTP பெறவில்லை என கூறிய நிலையில், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், OTP எண் பெறுவது சட்டவிரோதம் எனக் கூறிய கோர்ட் மத்திய, மாநில அரசுகள், DMK பொதுச்செயலாளர் பதில் அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.

error: Content is protected !!