News August 24, 2024
கட்சியில் இருந்து நீக்கம் : ஜெகன் அதிரடி

பெற்ற மகளையே வன்கொடுமை செய்த ரவியை ஏற்கெனவே கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி விளக்கமளித்துள்ளார். அவருக்கும், புரட்சி பாரதத்துகும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவரின் பெயருடன் கட்சி பெயரை பயன்படுத்தி, தவறான தகவலை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
சேலம் மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு!

சேலம் மாநகர காவல்துறை, ஆன்லைன் கணக்கு மோசடிகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அறிமுகமற்ற நபர்களிடம் OTP, கடவுச்சொல், வங்கி விவரங்கள் போன்ற தகவல்களை ஒருபோதும் வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியான இணைய இணைப்புகள் மற்றும் உதவி கோரும் அழைப்புகள் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்துள்ளனர்.
News November 24, 2025
BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 24, 2025
திமுகவுக்கு, தவெக என்றாலே ஒரு உறுத்தல்: டிடிவி தினகரன்

திமுகவுக்கு தவெக என்றாலே உறுத்தலாக இருப்பது அவர்களின் பேச்சிலேயே தெரிவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணி பற்றி பல கட்சிகள் பேசுவதாக கூறிய அவர், அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என மீண்டும் உறுதியாக கூறியுள்ளார். சமீபகாலமாக இவர் விஜய்க்கு ஆதரவான கருத்துகளை பேசி வருவதால், அமமுக தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.


