News November 11, 2025
EXIT POLL: ஆட்சியமைக்கும் மகாகத்பந்தன்?

பிஹாரில் மகாகத்பந்தன் ஆட்சியை பிடிக்கும் என Journo Mirror கருத்துக்கணிப்பு முடிவு வெளியிட்டுள்ளது. மகாகத்பந்தன் 130-140 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக NDA கூட்டணி 100-110 தொகுதிகளும், ஒவைசியின் AIMIM 3-4 தொகுதிகளும், இதர கட்சிகள் 0-3 தொகுதிகளும் வெல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என கூறியிருந்தன.
Similar News
News November 12, 2025
பிஹார் தேர்தல்: வாக்குப்பதிவில் புதிய சாதனை

பிஹார் தேர்தல் வரலாற்றில், வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக EC ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். 1951-ல் அதிகபட்சமாக 66.9% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 71% வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் வெளிப்படைத் தன்மையுடன், அமைதியான முறையில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தாய்மார்கள் தங்கள் மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
News November 12, 2025
இதை சாப்பிட்டால் ஆண்மை குறையும்… உஷார்

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை: *துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் -இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது *அதிக கொழுப்பு உள்ள பால் பொருள்கள் *பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் *சோயா உணவுகள் – இதன் மூலப்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.
News November 12, 2025
டெல்லியில் 50 உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. டெல்லியில் இதுபோல, ஏற்கெனவே 2005-ல் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு பஸ்ஸில் வெடிகுண்டு இருப்பது குறித்து அறிந்த ஓட்டுநர் குல்தீப் சிங், தன் உயிரை பணயம் வைத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினார். அதன் பிறகு வெடிகுண்டை தூக்கிவீசும் முயற்சியில் அவர் ஒற்றை கண் பார்வை மற்றும் கை, செவித்திறனை இழந்தார்.


