News December 4, 2024
EXCLUSIVE விருதுநகரில் 8124 பேர் வேலையிழப்பு

விருதுநகர் தொழிலப் பாதுகாப்பு அலுவலக ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 530 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 16,642 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 2020 முதல் 2024 அக்டோபர் வரை 3942 பாட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் விதிமீறல் காரணமாக 171 தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் இதில் பணியாற்றிய 8124 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இத்தகவல்கள் அனைத்து RTI மூலம் பெறப்பட்டவை.
Similar News
News September 18, 2025
காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

பாண்டிச்சேரியில் இருந்து காரில் விருதுநகர் நோக்கி மது பாட்டில்கள் கடத்தி வருவதாக விருதுநகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரட்டி வருவதை அறிந்த நபர் அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் வாகன காப்பகத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து போலீசார் கார் மற்றும் 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
அருப்புக்கோட்டையில் சாமி சிலை உடைப்பு

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலையம்பட்டி அருகே பொய்யாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இருவாக்காளியம்மன் கோவில். இன்று காலையில் இருவக்காளியம்மன் சுவாமியின் சிலை உடைக்கப்பட்டு இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
விருதுநகர் மாவட்டத்தின் அடிப்படை உதவி எண்கள்

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603
▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100
▶️விபத்து உதவி எண் -108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101
▶️விபத்து அவசர வாகன உதவி -102
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பற்றி தகவல் அளிக்க உதவி எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க