News December 31, 2024
EXCLUSIVE விருதுநகரில் 2024 வெடி விபத்தில் 45 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் தொடர் விபத்தால் ஆபத்து நிறைந்த தொழிலாக உள்ளது. 2024 ஆண்டில் இதுவரை 21 பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிர்பலி ஏற்பட்ட ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நாட்டை உலுக்கிய முதலிபட்டி பட்டாசு விபத்து ஏற்பட்ட 2012ல் 55 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச உயிர்பலி ஏற்பட்ட ஆண்டாக அமைந்துள்ளது.
Similar News
News November 17, 2025
விருதுநகரில் FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இதை SHARE பண்ணுங்க.
News November 17, 2025
விருதுநகர் அருகே பாட்டி, பேரன் பரிதாப பலி

திருச்சுழி அருகே குள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி 55. இவருக்கு நேற்று இரவு 8:30 மணியளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பேரன் நாகேந்திரனை, 25, அழைத்துக்கொண்டு டூவீலரில் கல்லூரணியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
ஊருக்கு அருகே எதிரே வந்த தனியார் மில் வேன் டூவீலர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 17, 2025
விருதுநகர்: கோஷ்டி மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

அருப்புக்கோட்டை மறவர் தெருவை சேர்ந்தவர்கள் வினோத்குமார், விக்ரம், விமல், அழகர் ஆகியோர் உடைய ராஜனை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். வினோத்குமார் நண்பர் ராஜ்குமார் தகராறு செய்தவர்களிடம் கேட்ட போது ராஜ்குமாரை 4 பேர் அருவாளால் வெட்டியதில், மதுரை GH-யில் சேர்க்கப்பட்டார் போலீசார் இருதரப்பை சேர்ந்த அழகர், 25, விமல், 22, விக்ரம், 23, மற்றும் விஜயராஜ், 19, மாரிச்சாமி, 19, உள்ளிட்டவரை கைது செய்தனர்.


