News December 31, 2024

EXCLUSIVE விருதுநகரில் 2024 வெடி விபத்தில் 45 பேர் பலி

image

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் தொடர் விபத்தால் ஆபத்து நிறைந்த தொழிலாக உள்ளது. 2024 ஆண்டில் இதுவரை 21 பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிர்பலி ஏற்பட்ட ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நாட்டை உலுக்கிய முதலிபட்டி பட்டாசு விபத்து ஏற்பட்ட 2012ல் 55 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச உயிர்பலி ஏற்பட்ட ஆண்டாக அமைந்துள்ளது.

Similar News

News December 5, 2025

விருதுநகர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்து வரும் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை 16,13,476 கணக்கெடுப்பு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் டிசம்பர் 11 வரை கணக்கெடுப்பு படிவங்களை பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

சிவகாசி: கண்மாயில் கிடந்த சடலம்

image

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் சிலோன் காலனி கண்மாய் பகுதியில் முதியவர் சடலம் ஒன்று கிடப்பதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாரனேரி போலீசார் முதியவர் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், உயிரிழந்த முதியவர் மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ராமர் (78)என்பது தெரியவந்தது. கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 5, 2025

அருப்புக்கோட்டை: மூதாட்டியிடம் செயின் பறிப்பு

image

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் நேற்று தனது மனைவி சுலோச்சனா(65) உடன் காரியாபட்டி அருகே கணக்கநேந்தல் சென்று விட்டு பைக்கில் அருப்புக்கோட்டை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது ராமசாமிபுரம் பகுதியில் பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்ற நிலையில் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!