News December 31, 2024

EXCLUSIVE விருதுநகரில் 2024 வெடி விபத்தில் 45 பேர் பலி

image

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் தொடர் விபத்தால் ஆபத்து நிறைந்த தொழிலாக உள்ளது. 2024 ஆண்டில் இதுவரை 21 பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிர்பலி ஏற்பட்ட ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நாட்டை உலுக்கிய முதலிபட்டி பட்டாசு விபத்து ஏற்பட்ட 2012ல் 55 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச உயிர்பலி ஏற்பட்ட ஆண்டாக அமைந்துள்ளது.

Similar News

News December 9, 2025

விருதுநகர் அருகே ஒருவர் குத்திக் கொலை

image

விருதுநகர் அருகே இ.முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ்(40). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி(37) என்பவரும் நேற்று மாலை அப்பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இதில் ஆத்திரமடைந்த பாலாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பராஜை மார்பு, கழுத்தில் குத்தி கொலை செய்த நிலையில் பாலாஜியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 9, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

1. இங்கு <>க்ளிக் <<>>செய்து ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!