News December 31, 2024
EXCLUSIVE விருதுநகரில் 2024 வெடி விபத்தில் 45 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் தொடர் விபத்தால் ஆபத்து நிறைந்த தொழிலாக உள்ளது. 2024 ஆண்டில் இதுவரை 21 பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிர்பலி ஏற்பட்ட ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நாட்டை உலுக்கிய முதலிபட்டி பட்டாசு விபத்து ஏற்பட்ட 2012ல் 55 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச உயிர்பலி ஏற்பட்ட ஆண்டாக அமைந்துள்ளது.
Similar News
News November 16, 2025
விருதுநகர் அருகே தலைகுப்பிற லாரி கவிழ்த்து விபத்து

திருச்சுழி – நரிக்குடி சாலையில் சூச்சனேரி விலக்கு பகுதியில் இன்று அதிகாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விருதுநகரில் இருந்து காரைக்குடிக்கு மளிகை சாமான்கள் ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்த விபத்தில் டிரைவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 16, 2025
விருதுநகர்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை வேண்டுமா.!

விருதுநகர் மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 16, 2025
விருதுநகர்: SIR தொடர்பாக தொலைபேசி எண் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத்திருத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


