News December 31, 2024
EXCLUSIVE விருதுநகரில் 2024 வெடி விபத்தில் 45 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் தொடர் விபத்தால் ஆபத்து நிறைந்த தொழிலாக உள்ளது. 2024 ஆண்டில் இதுவரை 21 பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிர்பலி ஏற்பட்ட ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நாட்டை உலுக்கிய முதலிபட்டி பட்டாசு விபத்து ஏற்பட்ட 2012ல் 55 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச உயிர்பலி ஏற்பட்ட ஆண்டாக அமைந்துள்ளது.
Similar News
News November 20, 2025
விருதுநகர்: ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் மூவர் பலி

தென்காசி, சிவகிரி சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 45, சங்கரன்கோவில் ரோட்டில் தனியார் மில்லில் பணி முடிந்து சாலையை கடந்த போது டூவீலர் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் 45, தென்காசி ரோட்டில் டூவீலரில் வந்த போது மதுரையை சேர்ந்தவர் டூ வீலர் எதிரெதிரே மோதியதில் மகேஷ் உயிரிழந்தார். அதேபோல் சேத்துார் சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் 48 விபத்தில் பலியானார்.
News November 20, 2025
விருதுநகர்: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

விருதுநகர் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு10th தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு <
News November 20, 2025
விருதுநகர்: மூதாட்டி கொலை மருமகள் உட்பட 3 பேர் கைது

சிவகாசி அருகே செவலுாரை சேர்ந்தவர் லட்சுமி 64. இவரது மகன் பாலமுருகனுக்கும் 39, அதே பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகள் முருகேஸ்வரிக்கும் 39, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் முருகேஸ்வரி கோபித்து தாய் வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் முருகேஸ்வரியின் தம்பி சங்கிலி பாண்டி 36, லட்சுமியை கட்டையால் அடித்ததில் நேற்று அதிகாலை இறந்தார்.


