News April 25, 2025
6-9-ம் வகுப்புகளுக்கு தேர்வு நிறைவு.. விடுமுறை துவக்கம்

1-5 வகுப்பு மாணவர்கள் ஏப். 17 முதல் விடுமுறையில் உள்ளனர். 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களும் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில், 6-9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்றுடன் தேர்வு முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இன்று முதல் விடுமுறை துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 2-ம் தேதியும், கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் லீவு

‘டிட்வா’ புயல் எதிரொலியால் தி<<18410367>>ருவாரூர், மயிலாடுதுறையை <<>>தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் வேகமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று(நவ.28) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News November 28, 2025
திமுகவில் இணைய முயலவில்லை: மல்லை சத்யா

திமுகவில் இணையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான முயற்சியை எடுக்கவில்லை என மல்லை சத்யா கூறியுள்ளார். இதற்கான காரணத்தை கூறிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதால் அவர்களுக்கு எந்த குளறுபடியும் வந்துவிடக்கூடாது என கருதியதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், திராவிட கொள்கைக்கு எதிரான கட்சிகளுடனும், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியிலும், சேரும் திட்டமில்லை எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News November 28, 2025
2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் லீவு!

‘டிட்வா’ புயல் எதிரொலியால் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.28) அரைநாள்(மதியம்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


