News December 8, 2024
EWS இடஒதுக்கீடு தவறானது: முன்னாள் நீதிபதி

உயர்வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமில்லாது, தார்மீக ரீதியாகவும் தவறானது என முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தெரிவித்துள்ளார். 10% இடஒதுக்கீடு பெறும் உயர்வகுப்பினர், வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்குமுறைகளையும் அனுபவித்தது இல்லை எனவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர்களுக்காகவே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 7, 2026
TN தேர்தல் தேதி.. வெளியானது ALERT

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறும் என்று கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று அரசின் TN Fact Check தெரிவித்துள்ளது. தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் மே 10-ம் தேதி முடிவடையும் என்று ECI அறிவித்துள்ளது. ஆனால், தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும், இந்த தவறான தகவலை நம்ப வேண்டாமெனவும் TN Fact Check விளக்கம் அளித்துள்ளது.
News March 7, 2026
என் கணவருக்கு நன்றி.. லதா ரஜினிகாந்த்!

மனைவிக்கு கணவரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து லதா ரஜினிகாந்த் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு வீட்டில் கணவர் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது. எனது கணவருக்கு தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார். எனது முயற்சிகள் அனைத்தையும் என்னுடைய கணவருக்கே அர்ப்பணிக்கிறேன் என்று கூறினார்.
News March 7, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் அறிவித்தார்

தேர்தலையொட்டி சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. தேர்தல் தேதியை அறிவிக்க சில நாள்களே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் PR சிவசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று EPS-ஐ இன்று சந்தித்தார். தொடர்ந்து, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவை தெரிவிப்பதாக சிவசாமி அறிவித்தார்.


