News May 1, 2024
அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும், படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும், விபத்தில் சிக்கிய அனைவருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 15, 2025
நட்சத்திர தம்பதிக்கு குழந்தை பிறந்தது.. ❤️❤️

பாலிவுட் நடிகர் ராஜ் குமார் ராவ் – நடிகை பத்ரலேகா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். தங்களது திருமண நாளில் குழந்தை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர். 2021 நவ.15-ல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர ஜோடிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News November 15, 2025
கரூரில் உயிரிழந்தவர்களின் வீடுகளில் CBI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று (நவ.14) கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் 7 பேரிடம் CBI அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று, கரூர் துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரின் வீடுகளுக்கு CBI அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து சென்று விசாரித்து வருகின்றனர்.
News November 15, 2025
BREAKING: CSK-வில் 10 வீரர்கள் விடுவிப்பு.. கையில் ₹43.9 கோடி

ஐபிஎல் 2026 சீசனையொட்டி, CSK அணி 10 வீரர்களை விடுவித்துள்ளது. ராகுல் திரிபாதி, வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோட்டி, மதீஷா பதிரானா, ரச்சின், டேவன் கான்வே ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ராஜஸ்தானுக்கு ஜடேஜா, சாம் கரன் டிரேட் செய்யப்பட்டு இருந்தனர். இதையடுத்து, CSK அணியால் ஏலத்தில் ₹43.9 கோடி செலவு செய்ய முடியும்.


