News May 1, 2024

அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

image

ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும், படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும், விபத்தில் சிக்கிய அனைவருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News August 21, 2025

நாமக்கல்: 4 சக்கர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள் அதனை தொடர்ந்து இன்று நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் இன்று உள்ளனர்.

News August 21, 2025

கஸ்டமர்களை ஏமாற்றிய Rapido.. ₹10 லட்சம் அபராதம்

image

ஆட்டோ கேரண்டி, கேஷ்பேக் சலுகைகள் என விளம்பரங்களை வெளியிட்டு கஸ்டமர்களை தவறாக வழிநடத்தியதாக Rapido நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ₹10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ‘5 நிமிடத்தில் ஆட்டோ கிடைக்கவில்லையென்றால் ₹50 கேஷ்பேக்’ என விளம்பரத்தை வெளியிட்டு, பணத்திற்கு பதிலாக Rapido காயின்களை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹50 பணமாக கொடுக்கும்படி ஆணையிட்டுள்ளது.

News August 21, 2025

சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் இல்லை

image

குண்டும், குழியுமாக இருக்கும் ரோட்டில் பயணிப்பதை விட அதற்கு செலுத்துவது தான் கட்டுவதுதான் கொடுமையானது. இந்த நிலையில்தான், கேரளாவில் சேதமடைந்து இருக்கும் NH-544 சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தரமான சாலை வசதியை NHAI, மக்களுக்கு அமைத்து தர வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இது அனைத்து டோல்கேட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்?

error: Content is protected !!