News April 15, 2024
தேர்தல் பத்திரம் ரத்தால் அனைவரும் வருந்துவர்

தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு உண்மையில் அனைவரும் வருந்துவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இது குறித்து ANI-க்கு அளித்த பேட்டியில் மோடி, தேர்தலின் போது கறுப்பு பணப்புழக்கத்தை தடுக்கவே தன்னுடைய அரசு இதனை கொண்டு வந்தது. ஆனால் இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யை பரப்பியதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News September 17, 2025
டிரம்ப் ஆதரவாளர் கொலை: இளைஞருக்கு மரண தண்டனை?

டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட டைலர் ராபின்சன் மீது கொலை உள்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டைலரை சுட்டுக் கொல்லும் வகையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.<<17683928>> சார்லியை<<>> கடந்த 10-ம் தேதி பொதுவெளியில் வைத்து டைலர் சுட்டுக் கொன்றார்.
News September 17, 2025
PAK vs UAE போட்டியில் நடுவர் மாற்றம்?

IND vs PAK போட்டியில் நடுவராக இருந்த ஆண்டி பைக்ராஃப்டை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என <<17723508>>பாக்.,<<>> எச்சரித்து இருந்தது. இதையடுத்து, இன்றைய போட்டியில் பைக்ராஃப்டிற்கு பதிலாக, ரிச்சி ரிச்சர்ட்சனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடுவராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அறிவிக்கப்பட்ட படி இன்று PAK vs UAE மோதும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 17, 2025
அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் BJP

BJP மாநில தலைவராக நயினார் தேர்வான பிறகு, அண்ணாமலை ஒதுங்கியே இருந்தார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என ஆதரவாளர்களும் மனக் குமுறலை வெளிபடுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த BJP நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அண்ணாமலை இல்லத்திற்கே சென்று அழைத்த B.L.சந்தோஷ், நயினாரின் சுற்றுப்பயணம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட வைத்து, அவருக்கான முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளார்.