News April 24, 2024
அடுத்த 5 ஆண்டுகளில் அனைவருக்கும் இடம் உறுதி

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும், இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேத் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ரயில்வேத் துறையின் தரம் அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்தப்படும் என்றார். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம் எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 9, 2026
தேர்தலுக்காக ₹3,000 வழங்கப்படுகிறது: தமிழிசை

பொங்கல் தொகுப்பு வழங்குவதில் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தமிழிசை சாடியுள்ளார். வங்கிக்கணக்கில் நேரடியாக ₹3,000 செலுத்துவதை விடுத்து, வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிக்கு MP, MLA, கவுன்சிலர் வரும்வரை மக்களை நிற்கவைத்து, கஷ்டப்படுத்தி பணத்தை திமுகவினர் கொடுப்பதாக கூறினார். மேலும், இது பொங்கலுக்காக வழங்கப்படும் பணமல்ல, தேர்தலுக்கானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
News January 9, 2026
புதிய கட்சியாக NDA-வில் இணைகிறாரா OPS?

திமுகவிற்கு OPS செல்கிறார் என்ற பேச்சு எழுந்த நிலையில், டெல்லி வந்த EPS-யிடம் OPS-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து அமித்ஷா பேசியுள்ளாராம். மேலும் ஏற்கெனவே அவர் தரப்பில் பதிவு செய்துள்ள Movement for Growth and Rights Party என்ற புதிய கட்சியின் பெயரில் தனிக் கட்சியாகத்தான் OPS இணைகிறார் என்றும், அவர் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 9, 2026
ஒரு தம் விலை ₹72.. காலையிலேயே ஷாக்

கலால் வரி உயர்வு பிப்ரவரி முதல் அமலாகவுள்ள நிலையில், ஒரு சிகரெட் ₹72 வரை விற்கப்பட உள்ளது. இதனால், தற்போதே மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சிகரெட் விலை முன்கூட்டியே அதிகரித்துள்ளது. சிகரெட் விலை பாக்கெட்டுக்கு ₹20-₹25 வரையும், சிகரெட் ஒன்றுக்கு ₹2-₹5 வரையும் அதிகரித்துள்ளது.


