News April 26, 2025
தவெக என்றாலே எல்லோருக்கும் பயம்: புஸ்ஸி ஆனந்த்

தவெக என்றாலே அனைத்து கட்சியினருக்கும் பயம் வந்துவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரைத்துள்ளார். வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு, 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருதி அடுத்த 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வீடுவீடாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
Similar News
News November 20, 2025
வரலாற்றில் இன்று

1750 – மைசூர் பேரரசர் திப்பு சுல்தான் பிறந்த தினம்.
1910 – புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் மறைந்த தினம்.
1950 – இசையமைப்பாளர் தேவா பிறந்த தினம்.
1959 – குழந்தைகள் உரிமை சாசனம் ஐ. நா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1980 – நடிகை ஷாலினி பிறந்தநாள்.
1985 – மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 வெளியானது.
News November 20, 2025
விமர்சனங்களுக்கு ராம்சரணின் மனைவி பதிலடி

தான் கூறிய கருமுட்டை சேமிப்பு, நிதி சுதந்திரம் <<18335938>>தொடர்பான கருத்துகள்<<>> SM-ல் ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பியுள்ளதாக உபாசனா ராம்சரண் தெரிவித்துள்ளார். அவரது கருத்து கருமுட்டை சேமிப்பு சென்டர்களுக்கு விளம்பரம் செய்யும் வகையில் உள்ளதாக பலரும் சாடியிருந்தனர். இதற்கு FACT CHECK பதிவிட்டு விளக்கமளித்துள்ள அவர், தன்னை பொறுத்தவரை திருமணமும், கரியரும் நிறைவான வாழ்க்கையின் சரிசமமான பகுதிகள் என்று கூறியுள்ளார்.
News November 20, 2025
NATIONAL ROUNDUP: ஹாஸ்பிடல் அலட்சியத்தால் குழந்தை பலி

*கொல்கத்தாவில் போலீசார் என சொல்லி மூதாட்டியிடம் ₹78 லட்சத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். *ராஜஸ்தானில் ஆசிரியரின் துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டான். *லக்னோவில் தனியார் பஸ் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். *பெங்களூரில் அரசு ஹாஸ்பிடலின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


