News April 26, 2025
தவெக என்றாலே எல்லோருக்கும் பயம்: புஸ்ஸி ஆனந்த்

தவெக என்றாலே அனைத்து கட்சியினருக்கும் பயம் வந்துவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரைத்துள்ளார். வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு, 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருதி அடுத்த 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வீடுவீடாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
Similar News
News November 18, 2025
இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
News November 18, 2025
இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
News November 18, 2025
நாளை தமிழகம் வருகிறார் PM மோடி

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை(நவ.19) PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


