News April 26, 2025
தவெக என்றாலே எல்லோருக்கும் பயம்: புஸ்ஸி ஆனந்த்

தவெக என்றாலே அனைத்து கட்சியினருக்கும் பயம் வந்துவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரைத்துள்ளார். வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு, 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருதி அடுத்த 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வீடுவீடாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
Similar News
News November 23, 2025
வர்த்தகம் 360°: இந்திய ரயில்வே படைத்த புதிய சாதனை

*இந்தியா இஸ்ரேல் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது. *நடப்பாண்டில் இதுவரை ஒரு லட்சம் கோடி டன் சரக்குகளை கையாண்டு இந்திய ரெயில்வே சாதனை படைத்துள்ளது. *கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, இந்தாண்டு அக்டோபர் வரையிலான கணக்கெடுப்பின்படி இந்தியாவின் ஏற்றுமதி 11.8% சரிந்துள்ளது.
News November 23, 2025
உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் ஏற்பாடு: நயினார்

மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பதிலேயே நான்கரை ஆண்டுகளை திமுக வீணடித்து விட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். கஞ்சா, போதை பொருட்களை ஒழிக்காத ஸ்டாலின், சொத்து வரி, மின் கட்டண உயர்வு பற்றி கண்டுகொள்ளவில்லை எனவும் சாடினார். ஆனால் உதயநிதியை முதல்வராக்கும் ஏற்பாடுகளை ஸ்டாலின் செய்து வருவதாக விமர்சித்தார். மேலும் நெல் ஈரப்பத அதிகரிக்க முழு காரணம் திமுகதான் எனவும் தெரிவித்தார்.
News November 23, 2025
16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?


