News March 2, 2025
எல்லோரும் இதை கண்டிப்பா செய்யுங்க..!

சம்மர் சீசன் தொடங்குவதற்கு முன்பே, வெப்பநிலை அதிகரித்து நாம் இன்னலை சந்திக்கிறோம். இதனால் நம்மை அதிகளவில் தண்ணீரை பருகும் படி அறிவுறுத்துகிறார்கள். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விலங்குகள், பறவைகள் நிலை என்ன? தண்ணீருக்காக அவை போராடுகின்றன. உங்கள் வீட்டு வாசலில் நீர் தொட்டிகளில் தண்ணீரையும், சில உணவு தானியங்களையும் பறவைகளுக்காக போட்டு வையுங்கள். இது ஒரு அடிப்படை மனிதாபிமானம். SHARE IT.
Similar News
News March 24, 2026
கட்டண உயர்வால் குமுறும் ’ஆன்லைன் உணவு பிரியர்கள்’

<<19434398>>Zomato-வைத் தொடர்ந்து<<>>, Swiggy-யும் தனது பிளாட்பார்ம் கட்டணத்தை ஒரு டெலிவரிக்கு ₹14.99-லிருந்து ₹17.58-ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளுக்கு தாறுமாறாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்நடவடிக்கையால், Swiggy-யில் இனி ஆர்டர் செய்வதையே நிறுத்திவிடுவோம் என வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். உங்கள் ரியாக்சன் என்ன?
News March 24, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏப்.1-ம் தேதி முழு ஆண்டுத் தேர்வும் தொடங்கவிருப்பதால் விடுமுறை கிடைக்குமா என்று பள்ளி மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. SHARE IT
News March 24, 2026
13 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் மரணம்

‘எங்களை மன்னித்துவிடு’ என பெற்றோர் உருக, என்ன நடக்கிறது என தெரியாமலே சுயநினைவற்று இருந்தான் மகன். இந்த மனதை உருக்கிய காட்சிகள் இணையவாசிகளை சமீபத்தில் ஆக்கிரமித்தது. இந்நிலையில், 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஹரிஷ் ராணா (32) உயிரிழந்துவிட்டதாக டெல்லி AIIMS கூறியுள்ளது. 2013-ல் கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்த ஹரிஷை <<19390375>>கருணைக் கொலை<<>> செய்ய SC அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


