News September 14, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶குறள் எண்: 52 ▶குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். ▶பொருள்: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
Similar News
News November 9, 2025
1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

தீபாவளியையொட்டி அறிவிக்கப்பட்ட BSNL-ன் ₹1 பிளான் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ₹1-க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால்ஸ் ஆகியவற்றை பெறலாம். புதிதாக சிம் வாங்குவோருக்கே இந்த ஆஃபர் பொருந்தும். நவ.15-ம் தேதியுடன் இந்த ஆஃபர் முடிவடைவதால் உடனே முந்துங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுகவும். SHARE IT
News November 9, 2025
நீங்க சரியா தூங்குறீங்களா? ஈசியா செக் பண்ணுங்க!

இந்த அறிகுறிகள் இருக்கா? ✦தொடர்ந்து 7- 9 மணிநேரம் வரை நல்ல தூக்கம் வரும் ✦படுக்க சென்ற 10- 20 நிமிடங்களுக்குள் தூக்கம் வந்துவிடும் ✦ஒன்று அல்லது இரண்டு முறை விழிப்பதை தவிர்த்து, நல்ல தூக்கம் கிடைக்கும் ✦காலையில் எனர்ஜியாக உணருவீர்கள் ✦தூங்கி எழுந்ததும், நன்கு உறங்கிய திருப்தி கிடைக்கும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் நன்றாக உறங்குகிறீர்கள் என அர்த்தம். SHARE IT.
News November 9, 2025
சற்றுமுன்: பிதாமகன் காலமானார்

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் ‘பிதாமகன்’ என போற்றப்படும் மூத்த பேராசிரியர் V.ராஜாராமன்(92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, IISc உள்ளிட்டவைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். TCS-ன் முதல் CEO ஃபக்கீர் சந்த் கோஹ்லி, Infosys நிறுவனர் NR நாராயண மூர்த்தி ஆகியோர் இவரது மாணவர்கள்தான். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1998-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.


