News September 14, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶குறள் எண்: 52 ▶குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். ▶பொருள்: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

Similar News

News December 20, 2025

CINEMA 360°: சிறந்த நடிகர் விருதை வென்ற சசிகுமார்

image

*ஜனநாயகனின் சாட்டிலைட் உரிமையை Z தமிழ் வாங்கியுள்ளது. *23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சசிகுமார் வென்றார். *அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள ‘ரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. *சென்னை திரைப்பட விழாவில் ராமின் ‘பறந்து போ’ படம் சிறந்த தமிழ் படம் விருதை வென்றுள்ளது.

News December 20, 2025

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா?

image

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட் பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அனால் 2026-ல் ஞாயிற்றுக்கிழமை(பிப்.1) வருவதால் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கிய நிகழ்வுகளுக்காக விடுமுறை தினங்களிலும் நாடாளுமன்றம் கூட வாய்ப்புள்ளது. உதராணமாக 2020-ல், கொரோனா தொற்று காலத்தின் போது அவசர தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் கூடியது.

News December 20, 2025

ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்

image

*உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும். *சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன். *ஒன்றை அடையவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல். *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. *மிரட்டிப் பணியவைக்கும் எந்த செயலும் வெறுக்கத்தக்கதே.

error: Content is protected !!