News August 26, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
▶பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
Similar News
News December 29, 2025
அசாத்தியமான படைப்பாக வந்திருக்கும் ‘சிறை’: மாரி

‘சிறை’ படம் பார்த்து மனம் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
News December 29, 2025
வங்கதேச குற்றச்சாட்டுக்கு BSF மறுப்பு

வங்கதேச மாணவர் தலைவர் ஹாதியை படுகொலை செய்தவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக, அந்நாட்டு போலீசார் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதை மறுத்துள்ள BSF, எந்த ஒரு தனிநபரும் சர்வதேச எல்லையை தாண்டியதற்கான ஆதாரம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. மேலும், எல்லையில் பாதுகாப்பு படையினர் எப்போதும் உச்சபட்ச கண்காணிப்பில் இருப்பதாகவும், சட்டவிரோத ஊடுருவல் இருந்தால் கண்டிப்பாக தெரியவந்துவிடும் என்றும் கூறியுள்ளது.
News December 29, 2025
திமுக, காங்., கூட்டணியை பிரிக்க முடியாது: SP

திமுக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் தவெகவுடன் இணையலாம் என்று தொடர்ந்து அரசியல் நோக்கர்களால் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சீட்டுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இல்லை என்றும் கொள்கையால் உருவாக்கப்பட்ட கூட்டணி எனவும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் இதை யாராலும் பிரிக்க முடியாது, இது எஃகு கூட்டணி என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


