News August 26, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
▶பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
Similar News
News December 24, 2025
வாழப்பாடியில் சம்பவ இடத்திலேயே பலி!

வாழப்பாடி ஆலடிப்பட்டி கிராமம் சிறுமலை பகுதியை சேர்ந்த கந்தன், கட்டிட கூலி வேலை செய்ய வந்தவர். இவர் பேளூருக்கு வேலைக்கு சென்ற போது, பேளூரில் இருந்து அறுநூத்துமலைக்கு செல்லும் பிக்-அப் வாகனம்அவரது இருசக்கர கந்தன் வாகனம் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே கந்தன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 24, 2025
அதிமுக + பாஜக + ஓபிஎஸ் கூட்டணி.. முடிவை அறிவித்தார்

EPS இருக்கும் வரை <<18654367>>அதிமுகவுடன் கூட்டணி<<>> இல்லை என OPS திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சென்னையில், நேற்று நடைபெற்ற NDA கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு, கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது, OPS, TTV தினகரனை கூட்டணியில் இணைத்துக் கொள்ள EPS பச்சைக்கொடி காட்டியதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை OPS தரப்பு நிராகரித்துள்ளது.
News December 24, 2025
MGR என்னும் சகாப்தம்!

ஒருவரின் பெயர் தலைமுறைகள் தாண்டியும் பேசப்படுவது சாதாரண புகழல்ல, அபூர்வம்! அது MGR-க்கு சாத்தியமானது. அவருக்கு இன்று 38-வது நினைவு நாள். அவரது ஆட்சியில் தான், அண்ணா யூனிவர்சிட்டி உருவானது. சத்துணவு திட்டம் அறிமுகமானது. திரையில் மக்கள் நாயகனாகவும், நிஜத்தில் புரட்சித் தலைவராக இன்றும் அரசியலின் மையப்புள்ளியாக தொடர்கிறார். உங்களுக்குள் இருக்கும் MGR-ன் நினைவை கமெண்ட்ல சொல்லுங்க.


