News March 21, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: அறத்துப்பால்
◾ இயல் : இல்லறவியல்
◾அதிகாரம்: பிறனில் விழையாமை
◾குறள்: 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
◾விளக்கம்: அடுத்தவரின் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.

Similar News

News December 6, 2025

சற்றுமுன்: மழை வெளுத்து வாங்கும்

image

டிட்வா புயல் எதிரொலியால், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை வெளுத்து வாங்கியது. பின், புயல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததால், நேற்று சற்று மழை குறைந்தது. இந்நிலையில், கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது.

News December 6, 2025

திமுக – பாஜக இடையே மறைமுக உறவு: ஜெயக்குமார்

image

அதிமுக யாருடைய காலிலும் விழவில்லை, திமுக தான் டெல்லிக்கு சென்று பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது என ஜெயக்குமார் பேசியுள்ளார். திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ஒரு மறைமுக உறவு இருப்பதாக கூறிய அவர், தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கான முழு ஆதரவை திமுக நிச்சயம் வழங்கும் என தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டு அதிமுக மூத்த தலைவர் இப்படி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 6, 2025

BREAKING: தமிழ்நாட்டில் நள்ளிரவில் பயங்கர விபத்து

image

ராமநாதபுரத்தில் நள்ளிரவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கீழக்கரை அருகே ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஐயப்ப பக்தர்கள் சென்ற கார், எதிரே வந்த கார் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து விபத்து நிகழ்வது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!