News March 21, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾ இயல் : இல்லறவியல்
◾அதிகாரம்: பிறனில் விழையாமை
◾குறள்: 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
◾விளக்கம்: அடுத்தவரின் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.
Similar News
News September 19, 2025
டெபாசிட் கட்டு.. பொதுக்கூட்டம் நடத்து: கோர்ட்

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் அரசியல் கட்சிகளிடம் செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எந்த ஒரு பெரிய பொதுக்கூட்டங்களின் போதும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடப்பது உண்டு எனவும், அந்த இழப்பை ஈடுகட்ட பாதுகாப்பு தொகை வசூலிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும், இதற்கான விதிமுறைகளை போலீஸ் வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
News September 19, 2025
கோடீஸ்வர குடும்பங்கள் லிஸ்ட்: TN-க்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8.71 லட்சமாக உயர்ந்திருப்பது தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ல் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை, தற்போது 90% அதிகரித்துள்ளது. 1.78 லட்சம் குடும்பங்களுடன், இந்திய கோடீஸ்வரர்களின் தலைநகராக மகாராஷ்டிரா விளங்குகிறது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் 3-ம் இடத்தில் உள்ளது.
News September 19, 2025
அமெரிக்கா வேண்டாம்: இந்தியா திரும்பும் ஐரோப்பா!

ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வாண்டெர் லெயென் அறிவுறுத்தியுள்ளார். வர்த்தகத்திற்கு அதிக வரிவிதிக்கும் அமெரிக்காவை மட்டும் சார்ந்திருப்பதை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலவச வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பாக பல ஐரோப்பிய தலைவர்களுடன் PM மோடி போனில் பேசிய நிலையில், இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.