News May 17, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: கடவுள் வாழ்த்து
◾ குறள் : 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
◾விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை

Similar News

News February 2, 2026

போர் வெடிக்கும்.. டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை

image

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை அனுப்பப்படுவதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது பிராந்திய போராக மாறும் என சுப்ரீம் லீடர் கொமேனி எச்சரித்துள்ளார். தாங்கள் போரை விரும்பவில்லை என்றாலும், தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ளார். மேலும், ஈரானின் எண்ணெய் & இயற்கை எரிவாயு வளங்களை கைப்பற்ற அமெரிக்கா முயல்வதாகவும் சாடியுள்ளார்.

News February 2, 2026

தேர்தல் ரிசல்ட் பாஜகவுக்கு தெரியும்: ஜோதிமணி MP

image

மத்திய பட்ஜெட் முற்றிலும் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக ஜோதிமணி MP கூறியுள்ளார். தேர்தலில் தோற்றுவிடுவோம் எனத் தெரிந்து தான் தமிழகத்திற்கு எவ்வித நலத்திட்டங்களையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் TN எதிர்பார்த்த மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம், குடிநீர் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News February 2, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

error: Content is protected !!