News March 18, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
◾விளக்கம்: அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
Similar News
News October 16, 2025
பல ரவுடிகளை பார்த்தவன்: அண்ணாமலை

சாமானிய மனிதனை திருமாவளவன் சென்ற கார் இடித்து தள்ளியதை பற்றி கேட்டால் மிரட்டுவதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற வெறுப்பு அரசியல், மிரட்டுவதை விட்டுவிட்டு நாகரிகமான அரசியலுக்கு திருமாவளவன் முன் வர வேண்டும் எனவும், வன்முறை அரசியலால் யாருக்கு என்ன லாபம் என்றும் அவர் வினவியுள்ளார். மேலும், போலீசாக பல ரவுடிகளை டீல் செய்த தன்னிடம், இந்த வேலையெல்லாம் பலிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
26 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. அதேபோல் குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை ஆஜர்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை <<17374196>>மீரா மிதுன்<<>> நேற்று சென்னை கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு தொடர் மனநல சிகிச்சை தேவைப்படுவதாக அரசு வக்கில் தெரிவிக்க, பிடிவாரன்ட் திரும்ப பெறப்பட்டு, விசாரணை நவ.6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த நடிகையின் மனநலம் பாதித்து டெல்லியில் இருப்பதாக அவரது தாயார் கூற, சமீபத்தில் போலீசார் அவரை பிடித்தனர்.