News November 24, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் ▶குறள் எண்: 108 ▶குறள்: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ▶பொருள்: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

Similar News

News December 17, 2025

வரலாற்றில் இன்று

image

*1398 – டெல்லியில் சுல்தான் நசீருதின் மகுமூதின் படையினர், பேரரசர் தைமூரினால்
தோற்கடிக்கப்பட்டனர்.*1973 – ரோம் நகர விமான நிலையத்தை பாலஸ்தீனர்கள் தாக்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். *2014 – அமெரிக்கா – கியூபா இடையேயான 50 ஆண்டுகளுக்கு பின் தூதரக உறவு புதுப்பிக்கப்பட்டது. *பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாள். *ஓய்வூதியர் நாள் (இந்தியா).

News December 17, 2025

ஜெய்லர் 2-வில் ‘காவாலா’ பார்முலா வொர்க் ஆகுமா?

image

ரஜினியின் ஜெயிலர் படம் மெகா ஹிட் அடித்த நிலையில் அதே பார்முலாவில் பார்ட்-2 உருவாக்கப்படுகிறது. ஜெயிலர் படத்தை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்க்க ‘காவாலா’ பாடல் பெரும் பங்காற்றியது. அதேபோல் ஒரு பாடல் பார்ட் 2-விலும் நெல்சன் வைத்துள்ளாராம். அதில் நடிகை <<18578998>>நோரா ஃபடேஹி<<>> டான்ஸ் ஆடி கலக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் கைவரிசை இந்த பாடலில் வொர்க் அவுட் ஆகுமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

News December 17, 2025

கண்ணதாசன் பொன்மொழிகள்

image

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் *கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினாள் உன் மீதே குற்றம்சாட்டிப் பழகு *உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்; உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். *கர்மத்தை செய்ய முடியாதவனும், தர்மத்தை காக்க முடியாதவனும் வாழ்வதில் அர்த்தமில்லை

error: Content is protected !!