News November 24, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் ▶குறள் எண்: 108 ▶குறள்: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ▶பொருள்: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

Similar News

News December 4, 2025

அறிவித்தார் ஈரோடு ஆட்சியர்!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 19,97,189 வாக்காளா்களில் புதன்கிழமை வரை 19,28,231 (96.55 சதவீதம்) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 68,958 வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட வேண்டியுள்ளன. மீதமுள்ள படிவங்களை திரும்பப் பெறுவது குறித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தார்.

News December 4, 2025

பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படுமா?

image

பாமகவும், மாம்பழ சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு டெல்லி HC-ல் நடந்துவருகிறது. பதவிக்காலம் முடிந்தும் அன்புமணியை தலைவர் என ECI அங்கீகரித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு சொல்கிறது. இதனால், இவ்வழக்கில் தற்போதைக்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. ஒருவேளை தேர்தல் வரை இப்பிரச்னை தொடர்ந்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம் எனவும், இது இருதரப்புக்கும் பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News December 4, 2025

BREAKING: போஸ்டரை நீக்கினார் செங்கோட்டையன்

image

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து, நேற்று வெளியிட்ட பதிவை, செங்கோட்டையன் நீக்கியுள்ளார். குறிப்பாக, தவெக கொள்கை தலைவர்கள் உடன் எம்ஜிஆர், ஜெ., புகைப்படமும் இருந்தது. இதனையடுத்து, தவெக கொள்கை தலைவர் ஜெ.,வா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது அரசியல் ரீதியாக சர்ச்சையானதை உணர்ந்த KAS, இன்று அந்த போஸ்டரை நீக்கியுள்ளார்.

error: Content is protected !!