News November 24, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் ▶குறள் எண்: 108 ▶குறள்: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ▶பொருள்: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
Similar News
News December 2, 2025
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சமீபமாக பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லி ஏர்போர்ட்டிற்கு வந்த இமெயிலில், விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக கூறப்பட்டது. உடனடியாக விமானம் மும்பை ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இது போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது.
News December 2, 2025
செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்..

பல முன்னாள் அமைச்சர்களும், அனுபவமுள்ள தலைவர்களும் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தையை நடத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. டிச.15-ல் ஓபிஎஸ் முக்கிய முடிவை எடுக்கவிருப்பதால், அதுவரை பொறுத்திருங்கள் என்று செங்கோட்டையனிடம் வெல்லமண்டி பதிலளித்துள்ளாராம்.
News December 2, 2025
கொட்டும் கனமழை.. விமான சேவை ரத்து

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இதனையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஏர்போர்ட்டில் இருந்து அகமதாபாத், அந்தமான், மும்பை செல்லக்கூடிய பல விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


