News September 28, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 66 ▶ குறள்: குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். ▶ பொருள்: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
Similar News
News December 31, 2025
12 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்.. ருத்ரதாண்டவம் ஆடிய சர்பராஸ்

விஜய் ஹசாரே தொடரில், கோவா அணிக்கு எதிரான மேட்ச்சில் மும்பை வீரர் சர்பராஸ் கான் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். வெறும் 75 பந்துகளில் 157 ரன்களை குவித்து மலைக்க வைத்துள்ளார். அவரது இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். 56 பந்துகளில் சதமடித்த அவர், அடுத்த 19 பந்துகளில் 57 ரன்களை விளாசி மிரட்டி இருக்கிறார். இந்த போட்டியில் மும்பை அணி, 50 ஓவர்களில் 444/8 ரன்களை குவித்துள்ளது.
News December 31, 2025
சற்றுமுன்: செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி

பொங்கலுக்கு முன் தவெகவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்கான திரைமறைவு வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக Ex MLA-க்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் லீக் ஆகியுள்ளது. இதனை ஸ்மெல் செய்த EPS தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News December 31, 2025
இந்த கேவலத்தை தடுக்கவேண்டும்: திருமா

திருத்தணியில் வடமாநிலத்தவர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட அவலம் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிப்பதாக கூறிய அவர், இத்தகைய கேவலமான போக்குகள் தடுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


