News September 28, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 66 ▶ குறள்: குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். ▶ பொருள்: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
Similar News
News December 18, 2025
சபரிமலையில் இதுவரை ₹210 கோடி வருமானம்

சபரிமலையில் நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடை திறந்து இதுவரை ₹210 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் ₹106 கோடி கிடைத்துள்ளதாகவும், மொத்த வருவாய் கடந்த ஆண்டைவிட 30% அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. தங்கும் அறைகளுக்கு முன்பணம் செலுத்திய பக்தர்கள் அதனை பெற தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
News December 18, 2025
வரலாற்றில் இன்று

*1822 – தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர் பிறந்தநாள்.
*1856 – நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் பிறந்தநாள்.
*2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.
*2006 – ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
News December 18, 2025
தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை மாஃபியா: HC

கனிமவள கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை HC-ன் உத்தரவுபடி TN அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசியல், பணபலத்தை வைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தமிழகத்தில் மாஃபியா போல் செயல்படுவதாக கோர்ட் தெரிவித்தது. மேலும் ₹5 கோடிக்கு கனிமவளம் கொள்ளையடிப்படும் நிலையில், ₹5 லட்சம் அபராதம் விதிப்பதில் என்ன பயன் என்றும் HC கேள்வி எழுப்பியுள்ளது.


