News March 17, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: இனியவை கூறல்
◾குறள்: 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
◾விளக்கம்: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
Similar News
News November 14, 2025
Beef வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை!

நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தில், இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ல் அம்ரேலியில் சட்டவிரோதமாக மாடுகளை கொன்று 40 கிலோ இறைச்சியை வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
பிஹாரா இது! அமைதியாக நடந்த தேர்தல்

பிஹாரில் தேர்தல் என்றாலே கலவரமும் சேர்ந்தே நடக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த முறை வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களும் பெரும் அளவில் திரண்டுவந்து வாக்களித்தனர். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வன்முறை சம்பவங்களும் இல்லை. தற்போது வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நிச்சயம் நல்ல மாற்றம் தானே?
News November 14, 2025
உலகின் முதல் AI குழந்தை!

பிரமாண்டமாய் வளர்ந்து வரும் AI, தற்போது கருவை உருவாக்கி அறிவியல் புரட்சி செய்துள்ளது. மெக்ஸிகோவில் 40 வயது பெண் ஒருவர், AI உதவியுடன் கருத்தரித்து, உலகின் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த IVF சிகிச்சையில், AURA என்ற AI ரோபோ சரியான விந்தணுவை, கருமுட்டையில் செலுத்தி வளர்க்கிறது. லட்சக்கணக்கில் செலவாகும் IVF சிகிச்சை இனி மலிவாகவும், வெற்றிகரமாகவும் மாறும் என்ற நம்பிக்கையை AI அளித்துள்ளது.


